பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்

“பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால
வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின
விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச”-பெரியவா

(பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
​நன்றி-21-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

தன்னோட பதிமூணாவது வயசுல ஆசார்யா சன்யாசப்
பட்டத்தை ஏத்துண்டு பீட ஆரோஹணம் பண்ணின
அன்னிக்கு சாயந்திரம், மடத்துல இருந்தவா எல்லாரும்
புதுப்பெரியவாளா (நம் பெரியவா) உங்களை எல்லாருக்கும்
அறிமுகம் பண்ணறதுக்கு நடக்கப்போற கூட்டத்துல நீங்க
உபன்யாசம் செய்யணும்னு பணிவா வேண்டிண்டா.

பாலகனாக இருந்த மகாபெரியவாளும் சரின்னு ஏத்துண்டார்.

புதுபெரியவா(நம் பெரியவா) உபன்யாசம் செய்யப்போறாங்கற
விஷயம் பரவினதும் கும்பகோணத்தோட மொத்த ஜனமும்
திரண்டு வந்த மாதிரி கூட்டம் நிரம்பி வழிஞ்சுது.

அந்தக் கூட்டத்துல பெரியவா இருந்த மேடைக்கு நேர் எதிர்ல
நின்னுண்டு இருந்தார் வயசான ஒருத்தர்.சுமார் அறுபது
அறுபத்தஞ்சு வயசு இருக்கும் அவருக்கு.

“ஏற்கனவே இருந்த 66-வது சுவாமிகளோட உபன்யாசங்களை
நிறைய கேட்டிருக்கேன். அவர் பழுத்த ஞானி.புராணம்,
இதிஹாசம் எல்லாம் பிரமாதமா சொல்லுவார். இந்த
ஸ்வாமிகள் ஏதோ பால்குடி மாறாத குழந்தை மாதிரி
இருக்கார்.இவர் என்னத்தை பேசப்போறாரோ!” பக்கத்து
ஆசாமிகிட்டே ஒரு மாதிரி சலிப்போடு சொல்லிண்டு
இருந்தார் அவர்.

ஆச்சு, பெரியவா உபன்யாசம் பண்ணத் தொடங்கினார்.
ஊசிவிழுந்தா கேட்கற அவ்வளவு நிசப்தம் அங்கே நிலவித்து.
கணீர் குரல்ல, பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால
வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின
விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்சார், பெரியவா.

அவ்வளவுதான், கூட்டத்துலேர்ந்து மொத ஆளா வந்து
பரமாசார்யா திருவடியில விழுந்து நமஸ்காரம் செஞ்சார்
அந்த முதியவர்.

“என்னை மன்னிக்கணும். பார்க்க பாலகனா இருக்கிற நீங்க
பெரிசா என்ன உபன்யாசம் செய்துடப்போறேள்னு
அலட்சியமா இருந்தேன்.என்னோட அறியாமையைத்
தெளிய வைச்சு, இந்த பீடத்துக்கு நீங்க தகுதியானவர்தான்னு
நிரூபிச்சுட்டேள்!” அப்படின்னு கதறினார்.

மௌனமா ஒரு புன்னகை மட்டும் பண்ணினார்,மகாபெரியவர்.
அந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்னங்கறது பரமாசார்யாளுக்கு
மட்டுமே தெரிஞ்ச பரமரகசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Entertainment News

Popular Categories