பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்

“பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால
வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின
விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச”-பெரியவா

(பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
​நன்றி-21-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

தன்னோட பதிமூணாவது வயசுல ஆசார்யா சன்யாசப்
பட்டத்தை ஏத்துண்டு பீட ஆரோஹணம் பண்ணின
அன்னிக்கு சாயந்திரம், மடத்துல இருந்தவா எல்லாரும்
புதுப்பெரியவாளா (நம் பெரியவா) உங்களை எல்லாருக்கும்
அறிமுகம் பண்ணறதுக்கு நடக்கப்போற கூட்டத்துல நீங்க
உபன்யாசம் செய்யணும்னு பணிவா வேண்டிண்டா.

பாலகனாக இருந்த மகாபெரியவாளும் சரின்னு ஏத்துண்டார்.

புதுபெரியவா(நம் பெரியவா) உபன்யாசம் செய்யப்போறாங்கற
விஷயம் பரவினதும் கும்பகோணத்தோட மொத்த ஜனமும்
திரண்டு வந்த மாதிரி கூட்டம் நிரம்பி வழிஞ்சுது.

அந்தக் கூட்டத்துல பெரியவா இருந்த மேடைக்கு நேர் எதிர்ல
நின்னுண்டு இருந்தார் வயசான ஒருத்தர்.சுமார் அறுபது
அறுபத்தஞ்சு வயசு இருக்கும் அவருக்கு.

“ஏற்கனவே இருந்த 66-வது சுவாமிகளோட உபன்யாசங்களை
நிறைய கேட்டிருக்கேன். அவர் பழுத்த ஞானி.புராணம்,
இதிஹாசம் எல்லாம் பிரமாதமா சொல்லுவார். இந்த
ஸ்வாமிகள் ஏதோ பால்குடி மாறாத குழந்தை மாதிரி
இருக்கார்.இவர் என்னத்தை பேசப்போறாரோ!” பக்கத்து
ஆசாமிகிட்டே ஒரு மாதிரி சலிப்போடு சொல்லிண்டு
இருந்தார் அவர்.

ஆச்சு, பெரியவா உபன்யாசம் பண்ணத் தொடங்கினார்.
ஊசிவிழுந்தா கேட்கற அவ்வளவு நிசப்தம் அங்கே நிலவித்து.
கணீர் குரல்ல, பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால
வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின
விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்சார், பெரியவா.

அவ்வளவுதான், கூட்டத்துலேர்ந்து மொத ஆளா வந்து
பரமாசார்யா திருவடியில விழுந்து நமஸ்காரம் செஞ்சார்
அந்த முதியவர்.

“என்னை மன்னிக்கணும். பார்க்க பாலகனா இருக்கிற நீங்க
பெரிசா என்ன உபன்யாசம் செய்துடப்போறேள்னு
அலட்சியமா இருந்தேன்.என்னோட அறியாமையைத்
தெளிய வைச்சு, இந்த பீடத்துக்கு நீங்க தகுதியானவர்தான்னு
நிரூபிச்சுட்டேள்!” அப்படின்னு கதறினார்.

மௌனமா ஒரு புன்னகை மட்டும் பண்ணினார்,மகாபெரியவர்.
அந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்னங்கறது பரமாசார்யாளுக்கு
மட்டுமே தெரிஞ்ச பரமரகசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories