January 19, 2025, 4:11 PM
28.5 C
Chennai

“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா?

“சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா? ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?..” சொன்னவர்-D.ஜானகிராமையா. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் நான் கோவில் பொறுப்பு ஏற்றபோது, (காமாக்ஷி கோவில் ஸ்ரீகார்யம்) வருமானமே இல்லை.உண்டியல் வைத்தால், ஸ்தானீகர்களுக்குப் பாதித் தொகை போயிடும்.அதனாலே,நித்யபூஜா தர்ம உண்டியல்-என்று வைத்தோம். வருஷத்துக்கு ஒரு தடவை உண்டியலைத் திறப்போம்.முப்பதாயிரம்,நாப்பதாயிரம் தான் இருக்கும். மளிகைக்கடை,பூக்கடைக்கு அப்போ தான் பாக்கிப் பணம் பட்டுவாடா செய்வோம். அதுவரை அவர்களும் பொறுமையா இருப்பா. ஒரு சமயம் பெரியவாகிட்ட, “கோவில் செலவுக்குப் பணம் போறல்லையே? நுழைவுக் கட்டணம் வைக்கட்டுமா?”ன்னு கேட்டேன். பெரியவாளுக்குக் கோபமான கோபம்! காசு தொடாத சந்யாஸி,அம்பாள் தரிசனத்துக்கு வந்தா,பணத்துக்கு எங்கே போவார்? “சுவாமி தரிசனத்துக்குக் கட்டணமா? ஒரு சட்டத்திலேயும் இடமில்லையே?.. நியாயமேயில்லை. ‘என்ட்ரன்ஸ் கட்டணம் வாங்கக் கூடாது’ என்று கண்டிப்பா சொல்லிட்டா. காமாக்ஷிக்கு லலிதா ஸஹஸ்ரநாம தங்கக் காசுமாலை இருக்கு. பெரியவா பண்ணிப் போட்டா. எப்படிப் பண்ணினா, தெரியுமோ? ஒரு விளம்பரம் கிடையாது. வாய் வார்த்தையா ஒவ்வொருத்தரா கேட்டுக் கேட்டே, பண்ணினா! “ஜானகிராமா, காசுமாலை ரொம்பக் கனமா இருக்குமே? காமாக்ஷிக்குத் தோளில் போட்டா, வலிக்கும் இல்லையா? அதனாலே, திருவாசியில் கொக்கிபோட்டு மாட்டும்படி ஏற்பாடு செய்..” சிலா மூர்த்தமாக இருந்து அருள்பாலிக்கும் காமாக்ஷிக்குக் கனக்கும்-என்று, பெரியவாளின் மிருதுவான உள்ளம் கவலைப்பட்டது. சாட்சாத் அம்பாளாகவே,மூர்த்தத்தைத் தரிசித்தவர் தானே,ஸ்ரீசரணர்கள். இதைக் கேளுங்கோ.இதே மாதிரி இன்னொரு சம்பவம்.11062732_966708246695949_3966038563901324568_n சின்னக் காஞ்சிபுரம் ஆனைக்கட்டித் தெரு மடத்தில் இருந்தபோது, பெரியவாளுக்குக் கனகாபிஷேகம் நடந்தது. அந்தத் தங்கத்தைக் கொண்டு, காமாக்ஷியின் தாமரைத் திருவடிகளுக்கு ஸ்வர்ண கவசம், மற்றும் ஆதிசங்கரர் மூர்த்தத்துக்குக் கவசம் செய்ய உத்திரவாயிற்று. பொதுவாக, தங்கக் கவசம் என்றால், செம்பினால் கவசம் அளவாகச் செய்து, அதன்மேல் தங்கரேக்குப் பதிப்பார்கள்- பக்தர்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக. ஆனால்,மகா ஸ்வாமிகள் என்ன செய்தார்? “ஜானகிராமா,ஆசார்யாள் மேனியிலே ஸ்வர்ணம் படணும். அதனால் செப்புக் கவசத்துக்கு உட்புறத்திலேயும் தங்கரேக்கு பதிக்கச் சொல்லு. “ஆம் அத்தனை குருபக்தி! காமாக்ஷி கோவில் ஆதிசங்கரர் சிலாமூர்த்த ஸ்வர்ண கவசம்,பெரியவா உத்திரவுப்படியே தான் செய்யப்பட்டது.உள்ளும் புறமும் ஸ்வர்ணம்

ALSO READ:  தீபாவளி பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னவை!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...

அரசியலமைப்பின் 75ம் ஆண்டு நிறைவு நாளில் பெருமிதம்; மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே.  அடுத்த மாதம் பாரதநாட்டவரின் சாதனைகள், உறுதிப்பாடுகள் மற்றும் வெற்றிகளின் புதிய கதைகளோடு மீண்டும் சந்திப்போம். 

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்