ஆனால், பாவம்! அகத்தார் உபநயனமாகதவன் வேதம் சொல்லக்கூடாதென்று தடுத்துவிட்டார்கள். இவன் செல்லந்தான், அவர்களும் துளி ‘முற்போக்கு’ எனப்படுவதுதான் – என்றாலும் வைதிகாசார முறைக்குப் பெரும்பாலும் கட்டுபட்டவர்களே ஆதலால் கண்மணிக்கும் இந்தக் கட்டுபாடு. ஐந்தாண்டுகளுக்குப் பிறகே ஸ்வாமிநாதனுக்கு உபநயனமானது. இளம் ப்ரஹ்மசாரிகள் வழக்கமாகக் கற்கும் வேதஸூக்தங்கள் சிலவே அதன்பின் அவன் கற்றதாக ஊகிக்கப்படுகிறது. அடுத்த இரண்டாம் ஆண்டே அவன் துறவியாகிவிட்டான். அதன்பின் குறுமுக அத்யயனம் என்றில்லாமல், கேள்வியிலேயேதான் ஸ்ரீ பெரியவாள் வேத ஸூக்தங்கள் ‘கற்றது’, ‘ச்ருதி’ என்றாலே கேள்விதான் என்பது இங்கே இப்படிப் புத்துருவம் கொண்டது! அதன் பின் கதை. நம் கதை ஆரம்பித்து, காந்தனிடமிருந்து கேள்வியிலேயே கிணி கற்றுக்கொண்ட மந்திரங்களில் ஸ்ரீ கணபதி ஆவாஹனம் குறித்தது உண்டா என்பதுதான். என் கேல்வித் தாளை- அதாவது, நான் கேள்வி எழுதியிருந்த தாளை- பார்த்த ஸ்ரீ சரணர் அவருக்கே உறியபடி, எதிர்பாராத ஒன்றில் தொடங்கினார் : “நேரெதிரா அர்த்தம் குடுக்கற ரெண்டு வார்த்தையச் சேத்துச் சொல்ற figure of speech-கு என்ன பேரு? Oxymoron-ஆ ?” “ஆமாம்.” “சின்னப் பெரியவாள்-நு எழுதியிருக்கியே! அதுக்குச் சொல்ல வந்தேன். சின்னதைப் பெரிசோட சேர்த்தா மரியாதை ஸ்தானத்துல இருக்கப்பட்டவா விஷயத்துல அழகாயில்லே… பெரிசு ரொம்பப் பெரிசாகிற துண்டோல்லியோ? ஆகையினாலே கலவைப் பெரியவர் ரெண்டு பேர்ல பெரியவரை கலவைப் பெரியவா-ன்னும், அடுத்தவரை (சின்னவரை என்று வறாத அழ்கைக் கவனிக்கவும்!) வெறுமே கலவைப் பெரியவா-ன்னும் சொல்லலாம். ‘சின்னப் பெரியவா-ன்னா, சின்னவர் எப்படிப் பெரியவராயிருப்பார்? பெரியவர் எப்டிச் சின்னவராயிருபார்? ரொம்பப் பேர் புதுபெரியவாளுக்கு ஆச்ரமம் குடுத்த புதுசுல அவரை அப்டிதான் சொல்ல ஆரம்பிச்சா, பொருத்தமாயில்லேன்னுதான் அதை ‘புதுப் பெரியவா’-ன்னு மாத்திக் குடுத்தது— “கன்னடத்துல ‘சிக்க-ன்னா ‘சின்ன’. இந்த மடத்து ஸ்வாமியாற்மார்களுக்கு ‘சிக்க ஓடையாரு;-ன்னு பேர் குடுத்து சாசனங்கள், பத்ராங்கள் இருக்கு. ‘ஓடையாரு’னா ஸ்வாமி.’ ‘ஸ்வாமி’-ங்க்றதுக்கு நேர்த் தமிழ் ‘உடையவர்’; கன்னடத்துல ‘ஓடையாரு’—ஸ்வாமி – உடையவர் ஒரே அர்த்தம்-கிறது தெரியுமோ?” என்று கேட்டார். -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.
Less than 1 min.Read
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 9
Hot this week
கட்டுரைகள்
அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!
டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும், அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா
கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்தியா
அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!
காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான 'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics
கட்டுரைகள்
அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!
டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும், அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா
கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்தியா
அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!
காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான 'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...
விளையாட்டு
IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.
சென்னை
திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!
உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?
சுற்றுலா
மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!
முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

