ஆனால், பாவம்! அகத்தார் உபநயனமாகதவன் வேதம் சொல்லக்கூடாதென்று தடுத்துவிட்டார்கள். இவன் செல்லந்தான், அவர்களும் துளி ‘முற்போக்கு’ எனப்படுவதுதான் – என்றாலும் வைதிகாசார முறைக்குப் பெரும்பாலும் கட்டுபட்டவர்களே ஆதலால் கண்மணிக்கும் இந்தக் கட்டுபாடு. ஐந்தாண்டுகளுக்குப் பிறகே ஸ்வாமிநாதனுக்கு உபநயனமானது. இளம் ப்ரஹ்மசாரிகள் வழக்கமாகக் கற்கும் வேதஸூக்தங்கள் சிலவே அதன்பின் அவன் கற்றதாக ஊகிக்கப்படுகிறது. அடுத்த இரண்டாம் ஆண்டே அவன் துறவியாகிவிட்டான். அதன்பின் குறுமுக அத்யயனம் என்றில்லாமல், கேள்வியிலேயேதான் ஸ்ரீ பெரியவாள் வேத ஸூக்தங்கள் ‘கற்றது’, ‘ச்ருதி’ என்றாலே கேள்விதான் என்பது இங்கே இப்படிப் புத்துருவம் கொண்டது! அதன் பின் கதை. நம் கதை ஆரம்பித்து, காந்தனிடமிருந்து கேள்வியிலேயே கிணி கற்றுக்கொண்ட மந்திரங்களில் ஸ்ரீ கணபதி ஆவாஹனம் குறித்தது உண்டா என்பதுதான். என் கேல்வித் தாளை- அதாவது, நான் கேள்வி எழுதியிருந்த தாளை- பார்த்த ஸ்ரீ சரணர் அவருக்கே உறியபடி, எதிர்பாராத ஒன்றில் தொடங்கினார் : “நேரெதிரா அர்த்தம் குடுக்கற ரெண்டு வார்த்தையச் சேத்துச் சொல்ற figure of speech-கு என்ன பேரு? Oxymoron-ஆ ?” “ஆமாம்.” “சின்னப் பெரியவாள்-நு எழுதியிருக்கியே! அதுக்குச் சொல்ல வந்தேன். சின்னதைப் பெரிசோட சேர்த்தா மரியாதை ஸ்தானத்துல இருக்கப்பட்டவா விஷயத்துல அழகாயில்லே… பெரிசு ரொம்பப் பெரிசாகிற துண்டோல்லியோ? ஆகையினாலே கலவைப் பெரியவர் ரெண்டு பேர்ல பெரியவரை கலவைப் பெரியவா-ன்னும், அடுத்தவரை (சின்னவரை என்று வறாத அழ்கைக் கவனிக்கவும்!) வெறுமே கலவைப் பெரியவா-ன்னும் சொல்லலாம். ‘சின்னப் பெரியவா-ன்னா, சின்னவர் எப்படிப் பெரியவராயிருப்பார்? பெரியவர் எப்டிச் சின்னவராயிருபார்? ரொம்பப் பேர் புதுபெரியவாளுக்கு ஆச்ரமம் குடுத்த புதுசுல அவரை அப்டிதான் சொல்ல ஆரம்பிச்சா, பொருத்தமாயில்லேன்னுதான் அதை ‘புதுப் பெரியவா’-ன்னு மாத்திக் குடுத்தது— “கன்னடத்துல ‘சிக்க-ன்னா ‘சின்ன’. இந்த மடத்து ஸ்வாமியாற்மார்களுக்கு ‘சிக்க ஓடையாரு;-ன்னு பேர் குடுத்து சாசனங்கள், பத்ராங்கள் இருக்கு. ‘ஓடையாரு’னா ஸ்வாமி.’ ‘ஸ்வாமி’-ங்க்றதுக்கு நேர்த் தமிழ் ‘உடையவர்’; கன்னடத்துல ‘ஓடையாரு’—ஸ்வாமி – உடையவர் ஒரே அர்த்தம்-கிறது தெரியுமோ?” என்று கேட்டார். -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.
Less than 1 min.Read
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 9
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?
உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?
உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

