“நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்”

“நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்”

“‘ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும் 29570792 1912794232099066 6911014755507604445 n - 2026கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?-பெரியவா

‘நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர் வித்யாசம் பாராட்டிண்டு அங்கே பாதி பூஜையிலே விட்டுட்டு வந்தது மஹா தப்பு. க்ஷணம் கூட இங்கே நிற்காதேயும். போம் அங்கேயே’-சிருங்கேரி பாரதி ஸ்வாமிகள்.

.

கட்டுரையாளர்-ரா.கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள்.-புத்தகம்.

பெரியவா அப்படி ஹாங், ஹாங் ன்னு பொருமி நான் வேறெப்போதும் பார்த்ததில்லை’ என்று கூறி காஞ்சி மட மேனேஜர் விஸ்வநாத ஐயர் ஒரு சம்பவம் நினைவு கூர்வார். பாரதி ஸ்வாமிகள் அவதூதராக, ஆடிப்பாடி, அழுது, சிரித்துக்கொண்டு அதீத நிலைகளில் இருந்த சமயங்களில் ஒன்றாம்.

அதை பற்றி ஓர் அடியார் மஹா பெரியவாளிடம், ‘அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதாம்’ என்றாராம். அவ்வளவுதான், பெரியவாள் காதில் நாராசம் பாய்ந்தாற்போல, ‘சிவ சிவா, சிவ சிவா, சிவ சிவா’ என்று ஏறக்குறைய அலறியே விட்டு, முன்பின் எப்போதும் இல்லாத படி, பொருமி தீர்த்து விட்டாராம்.

‘ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும் கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?’ என்று வெகு நேரம் பொரிந்து தள்ளிவிட்டு, ‘சந்நிதிக்கு போய் சந்திரமௌலீஸ்வரர் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கோ’ என்று முடித்தாராம்.

மஹா பெரியவாள் 1935 இல் கல்கத்தாவுக்கு எழுந்தருளி நவராத்திரி வழிபாடு நடத்தினார். அவ்வழிபாட்டுக்கான நிர்வாக குழு உறுப்பினர்களில் சிருங்கேரி பீடத்து பரம பக்தரான மந்திரேஸ்வர சர்மா ஒருவர்.

நவராத்திரி முதல் நான்கு நாள் – சதுர்த்தி வரை – பூஜைகளில் தொண்டு செய்த அவருக்கு அதற்கு மேல் பொருந்தவில்லை. ‘என்ன இருந்தாலும், நம் சிருங்கேரி பத்ததியில் நம் சிருங்கேரி ஆச்சாரியாள் செய்யும் பூஜை போல் ஆகுமா?’ என்று தோன்றி, இருப்பு கொள்ளாமல், ஆயிரம் காவதம் கடந்து சிருங்கேரி அந்து சேர்ந்தார்.

ஆனால் பாரதி ஸ்வாமிகளோ தம் இயல்புக்கு மாறாக அசாத்திய கடுமையுடன் அவரை நோக்கினார்.

‘நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர் வித்யாசம் பாராட்டிண்டு அங்கே பாதி பூஜையிலே விட்டுட்டு வந்தது மஹா தப்பு. க்ஷணம் கூட இங்கே நிற்காதேயும். போம் அங்கேயே’ என்று நிர்தாட்சிண்யமாக சொல்லி விட்டார்.

சர்மா பக்குவியாதலால் பாடம் பெற்றார். பாவனா சுத்தி பெற்றார்.

இன்று போல், பிரயாண வசதிகள் இல்லாத அந்நாளில் எப்பாடோ பட்டு சரியாக விஜய தசமி அன்று கல்கத்தா சேர்ந்து மஹா பெரியவாளின் காலில் விழுந்தார்.

பாரதி ஸ்வாமிகள் கூறியதை சொல்லி, தமது பேத எண்ணம் பேதிக்கப்பட்டதை தெரிவித்து கொண்டார்.

மஹா பெரியவாள் ஆனந்தமாக சிரித்துக்கொண்டு அவருக்கு தாராளமாக நவராத்திரி பிரசாதங்கள் அளித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories