January 19, 2025, 4:25 PM
28.5 C
Chennai

சிதம்பரத்து ஆட்டக்காரன்!.

20683_671948076266709_3512172854606087227_n (இந்த வார கல்கி) ஆடல் கலை என்றதும் ஒரு விநோத விளையாட்டுதான்! நிஜமாக வாழ்க்கையிலே எழும்பாத பாவங்களை உண்டாக்கிக் கொண்டு, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாத ஜதி பேதங்களைப் போட்டுக் கொண்டு, இல்லாத பாத்திரங்களை இருக்கிறதாக வைத்துக் கொண்டு அபிநயம் செய்கிறதால் அது விளையாட்டுதானே? “நிஜம்’ என்று நாம் நினைக்கும் வாழ்க்கையே பொய்ம்மாயையாகிவிடும் அநுபூதி வரை அபிநயக் கலை அதன் உச்ச ஸ்தானத்தில் கொண்டுவிட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானாலும், அதுவும் விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டு விநோதமாகவே போவதுதானே? உச்சியான பூர்த்தி ஸ்தானத்தில் விளையாட்டே வினையாவதாகச் சொல்லலாம்! (ஸ்ரீசரணர் சிறிது பொழுது தமக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்து, பின்னர் தொடர்வார்) ஸரியாய்ச் சொன்னால், விளையாட்டால் வினையே போவதாகச் சொல்லலாம்! அப்படிப்பட்ட நாட்டிய விளையாட்டாகவே இந்தப் பொய்ம் மாய ஜகத்தின் ஸ்ருஷ்டியிலிருந்து ஆரம்பித்து அதிலிருந்து விடுவித்து சிதம்பரமான ஞானாகாசமாகிற பரம ஸத்யத்தில் சிவமாகிற தன்னுடன் தானாகவே ஐக்கியப்படுத்திக் கொள்வதான அவுக்ரஹம் வரையில் “ஐந்தொழில்’கள் என்கிறவற்றைப் பண்ணி விடுபவன்தான் சிதம்பரத்து ஆட்டக்காரன். ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் (என்பவை) எல்லாருக்கும் தெரிந்த மூன்று தொழில்கள். இந்த மூன்றுமே பரம ஸத்யத்தை மறைத்துவிடும் மாயை என்ற திரைக்குள் நடப்பவைதான்! அந்த மாயத் திரையைப் போட்டு மறைக்கும் “திரோதானம்’ என்பது நாலாவது தொழில், திரையை நீக்கி, ஞானாகாசத்தில் மோக்ஷமளிக்கிற “அநுக்ரஹம்’ ஐந்தாவது தொழில். சாந்தன் எனப்படுகிற பரமேச்வரன் ஆட்டமாக ஆடிப் பண்ணும் இதையே மாயா விநோதன் எனப்படுகிறவன் சாந்தமான தூக்கமாகப் பண்ணிக்காட்டுவதில் அந்த இருவரும், யுனிடி இன் டைவர்சிடி நிரூபித்துக் காட்டுகிறார்கள்.

  • ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
ALSO READ:  தீபாவளி பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னவை!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...

அரசியலமைப்பின் 75ம் ஆண்டு நிறைவு நாளில் பெருமிதம்; மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே.  அடுத்த மாதம் பாரதநாட்டவரின் சாதனைகள், உறுதிப்பாடுகள் மற்றும் வெற்றிகளின் புதிய கதைகளோடு மீண்டும் சந்திப்போம். 

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்