“இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்..”(பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி)

“இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்..”(பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி)

(பெரியவாள் சிவனடியார்களுக்கு சிவன்; திருமால் அடியார்களுக்குத் திருமால்; ஆக மொத்தம் ஸகுண பிரம்மம் )

சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

காஞ்சிபுரம் சமீபம் கீழம்பி என்னும் கிராமம். வயல் வரப்புகளின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம்.

பிரதிவாதி பயங்கரம்உ.வே.அண்ணங்கராசாரியாரும் உடன் வந்து கொண்டிருந்தார்

. அவர் மிகப் பெரிய வைணவத் தலைவர். வைணவ சம்பிரதாயங்களைக் குறைவில்லாமல் அனுஷ்டிப்பவர். பெரியவாளிடம் இமாலய பக்தி வைத்திருந்தார் வரப்பின்மேல் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்த போது, அண்ணங்கராசார்ய ஸ்வாமி, கைகளை கூப்பிக்கொண்டு,

“தேவரீர், ஒரு நிமிஷம் அப்படியே நிற்கணும்…” என்று வேண்டினார்.

பெரியவாள் நின்று விட்டார்கள்.

வரப்பை ஒட்டி, வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. இரு கைகளாலும் அந்தத் தண்ணீரை எடுத்து, பெரியவாளின் திருப்பாதங்களில் விட்டார், அண்ணங்கராசாரியார்.

பெரியவாள் அப்போது அசையாமல் நின்றார்கள்.

பெரியவாளின் பாத தீர்த்தத்தைத் தன் தலையில் தெளித்துக்கொண்டு, சிறிதளவு அருந்தினார்.

“இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்..” என்று மனம் நெகிழக் கூறிவிட்டு, “தேவரீர் மன்னிக்கணும் ..தாமதப்படுத்தி விட்டேன்” என்று உளமாரக் கூறினார்.

அண்ணங்கராசாரியார், எப்பொழுதும் பெரியவாளின் இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டு தான் வந்தனம் செய்வார். அவருடைய பிறந்த நாளுக்கு மடத்திலிருந்து ஒரு மூட்டை அரிசியும்,பத்தாறு வேஷ்டியும் அனுப்புவது வழக்கம்

.இப்படி, விளம்பரம், இல்லாமல் பெரியவாளிடம் பக்தி செலுத்தியவர்கள், அநேகம் பேர்கள்.

பெரியவாள் சிவனடியார்களுக்கு சிவன்; திருமால் அடியார்களுக்குத் திருமால்; ஆக மொத்தம் ஸகுண பிரம்மம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 27 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories