“இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்..”(பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி)

“இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்..”(பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி)

(பெரியவாள் சிவனடியார்களுக்கு சிவன்; திருமால் அடியார்களுக்குத் திருமால்; ஆக மொத்தம் ஸகுண பிரம்மம் )

சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

காஞ்சிபுரம் சமீபம் கீழம்பி என்னும் கிராமம். வயல் வரப்புகளின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம்.

பிரதிவாதி பயங்கரம்உ.வே.அண்ணங்கராசாரியாரும் உடன் வந்து கொண்டிருந்தார்

. அவர் மிகப் பெரிய வைணவத் தலைவர். வைணவ சம்பிரதாயங்களைக் குறைவில்லாமல் அனுஷ்டிப்பவர். பெரியவாளிடம் இமாலய பக்தி வைத்திருந்தார் வரப்பின்மேல் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்த போது, அண்ணங்கராசார்ய ஸ்வாமி, கைகளை கூப்பிக்கொண்டு,

“தேவரீர், ஒரு நிமிஷம் அப்படியே நிற்கணும்…” என்று வேண்டினார்.

பெரியவாள் நின்று விட்டார்கள்.

வரப்பை ஒட்டி, வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. இரு கைகளாலும் அந்தத் தண்ணீரை எடுத்து, பெரியவாளின் திருப்பாதங்களில் விட்டார், அண்ணங்கராசாரியார்.

பெரியவாள் அப்போது அசையாமல் நின்றார்கள்.

பெரியவாளின் பாத தீர்த்தத்தைத் தன் தலையில் தெளித்துக்கொண்டு, சிறிதளவு அருந்தினார்.

“இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்..” என்று மனம் நெகிழக் கூறிவிட்டு, “தேவரீர் மன்னிக்கணும் ..தாமதப்படுத்தி விட்டேன்” என்று உளமாரக் கூறினார்.

அண்ணங்கராசாரியார், எப்பொழுதும் பெரியவாளின் இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டு தான் வந்தனம் செய்வார். அவருடைய பிறந்த நாளுக்கு மடத்திலிருந்து ஒரு மூட்டை அரிசியும்,பத்தாறு வேஷ்டியும் அனுப்புவது வழக்கம்

.இப்படி, விளம்பரம், இல்லாமல் பெரியவாளிடம் பக்தி செலுத்தியவர்கள், அநேகம் பேர்கள்.

பெரியவாள் சிவனடியார்களுக்கு சிவன்; திருமால் அடியார்களுக்குத் திருமால்; ஆக மொத்தம் ஸகுண பிரம்மம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories