நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்கந்த மாதாவுக்கு விருப்பமான நைவேத்யம் என்ன?

Published:

skandamata
skandamata

தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி  ரகுநாதன்

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில் – 9

கேள்வி: ஸ்கந்த மாதாவாக தரிசனம் அளிக்கும் லலிதா திரிபுரசுந்தரிக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்ன? புஷ்பங்கள் என்ன?

பதில்: ஐந்தாம் நாள் பஞ்சமி. ‘பஞ்சமி பஞ்சபூத தேசி..’ என்கிறோம். பஞ்சமி லலிதா வரிசைக்கிரமத்தில் பார்க்கும்போது வாராஹி தேவிக்கு மிகப் பிரீதியான நாள்.

அதனால் வடை நிவேதனம் கூறப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமிக்கு பிடித்தது கூட பாயசமும் வடையும். அதையும் கவனத்தில் கொண்டு பாயசம், வடை நைவேத்தியம் செய்வது இன்றைய சிறப்பு.

சாத்வீகமான புஷ்பங்கள் எது கிடைத்தாலும் இன்றைய வழிபாட்டுக்கு உகந்தவையே. ஸ்கந்தமாதா சொரூபம் வெண்மையான ஒளி பொருந்தியதாக வர்ணிக்கப்படுவதால் வெண்ணிற புஷ்பங்கள் சிறப்பு. அதற்காக பிற புஷ்பங்களால் பூஜிக்கக் கூடாது என்று அல்ல. அவற்றையும் உபயோகிக்கலாம்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img