மகாதேவ ஜயம் !

shiva linga
shiva linga

– ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

மேலைக் கடலோரத்தில், அதாவது இன்றைய கன்னட தேசத்தில் ( மங்களூர் – உடுப்பி ) சுமார் கி.பி 14அம் நூற்றாண்டில் தீவிர வைஷ்ணவம் தோன்றலாயிற்று. த்வைத சித்தார்ந்த சிற்பியான ஸ்ரீ மத்வர், மத்வ சம்பிரதாயத்தைத் தோற்றுவித்தார். அதில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவே முழுமுதற் கடவுள், வேறு தெய்வம் எதுவுமில்லை.

ஸ்ரீ மத்வரின் சிஷ்ய பரம்பரையினரின் எழிய சீல வாழ்க்கையும் , சாஸ்திர ஞானமும் சாதாரன மக்களை வெகுவாக வசீகரித்தன. ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தத்தை ஏற்றிருந்த பல குடும்பங்களும் ஸ்ரீ மத்வரின் சம்பிரதாயத்திற்கு மாறின.

காலம் உருண்டோடியது. அத்வைதம் அப்பிரதேசத்திலிருந்து அறவே மறைந்திருந்தது. ஆனால் அத்வைத – தத்வ ரீதியில் சிவ-விஷ்ணு பேதமின்றி பக்தி செலுத்தி வந்த குடும்பங்கள் அந்நிலையிலும் மாறவில்லை – மாற முடியவுமில்லை. இன்றும் அங்கு சிவ-விஷ்ணு பேதம் பெயரளவிற்குத்தான் இருக்கிறதேயொழிய உள்மனதில் ஏதும் களங்கமின்றியே மக்கள் பக்தி செலுத்துகிறார்கள்.

மத்வ சம்பிரதாயத்தையொட்டி ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆராதனையை பக்தி சிரத்தையோடு செய்து வருபவர்கள், கூடவே சிவ ஆராதனையும் செய்கிறார்கள். இரத்தத்தில் ஊறிப்போன இப்பழக்கத்தின் காரணமாக அங்குள்ள பெரியோர்கள் பலர் சிவனை மனதின் அடித் தளத்தில் நிலைந்திருக்கச் செய்து, எந்தக் காரியம் செய்ய முற்பட்டாலும், எத்தகைய ஆபத்து நேரிட்டாலும், எவ்வித மனச்சோர்வு ஏற்பட்டாலும், ” மகாதேவ விஜயம் ” என்று உரக்கக் கூவி, சர்வமங்களத்தை மட்டும் அளிக்கும் எமையாளும் ஜெகதீசனைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

mahadevar - 2026

அந்த மகாதேவன் வந்துவிட்டால் அங்கு ஜயம் ஒன்றுதான் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் இருப்பதாலேயே ‘ மகாதேவ விஜயம், மகாதேவ ஜய ‘ மாக மாறிவிட்டது !. ‘ ஓம் நமசிவாய ‘ என்று தமிழகத்திலும், ‘ ஹர ஹர ஹர மகாதேவா ‘ என்று வடநாட்டிலும் பக்தர்கள் கோஷமிடும் ஈசுவரன் அங்கே வைஷ்ணவர்களிடையே ‘ மகாதேவ ஜய ‘ மாகக் களி நடனம் புரிகிறான்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

” அஞ்செழுத்திலே பிறந்து அஞ்சே ழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள் !
அஞ்செழுத்தி லோரெழுத்தை அறிந்துகூற வல்லீரேல்
அஞ்ச லஞ்ச லென்று நாதன் அம்பலத்தி லாடுமே ! “

(சைவம் ஆதிசங்கரர் அருளிய ஷண்மத ஸ்தாபனம் – சாஸ்தா பதிப்பக நூலில் இருந்து…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories