December 6, 2025, 2:36 AM
26 C
Chennai

மகாதேவ ஜயம் !

shiva linga
shiva linga

– ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

மேலைக் கடலோரத்தில், அதாவது இன்றைய கன்னட தேசத்தில் ( மங்களூர் – உடுப்பி ) சுமார் கி.பி 14அம் நூற்றாண்டில் தீவிர வைஷ்ணவம் தோன்றலாயிற்று. த்வைத சித்தார்ந்த சிற்பியான ஸ்ரீ மத்வர், மத்வ சம்பிரதாயத்தைத் தோற்றுவித்தார். அதில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவே முழுமுதற் கடவுள், வேறு தெய்வம் எதுவுமில்லை.

ஸ்ரீ மத்வரின் சிஷ்ய பரம்பரையினரின் எழிய சீல வாழ்க்கையும் , சாஸ்திர ஞானமும் சாதாரன மக்களை வெகுவாக வசீகரித்தன. ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தத்தை ஏற்றிருந்த பல குடும்பங்களும் ஸ்ரீ மத்வரின் சம்பிரதாயத்திற்கு மாறின.

காலம் உருண்டோடியது. அத்வைதம் அப்பிரதேசத்திலிருந்து அறவே மறைந்திருந்தது. ஆனால் அத்வைத – தத்வ ரீதியில் சிவ-விஷ்ணு பேதமின்றி பக்தி செலுத்தி வந்த குடும்பங்கள் அந்நிலையிலும் மாறவில்லை – மாற முடியவுமில்லை. இன்றும் அங்கு சிவ-விஷ்ணு பேதம் பெயரளவிற்குத்தான் இருக்கிறதேயொழிய உள்மனதில் ஏதும் களங்கமின்றியே மக்கள் பக்தி செலுத்துகிறார்கள்.

மத்வ சம்பிரதாயத்தையொட்டி ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆராதனையை பக்தி சிரத்தையோடு செய்து வருபவர்கள், கூடவே சிவ ஆராதனையும் செய்கிறார்கள். இரத்தத்தில் ஊறிப்போன இப்பழக்கத்தின் காரணமாக அங்குள்ள பெரியோர்கள் பலர் சிவனை மனதின் அடித் தளத்தில் நிலைந்திருக்கச் செய்து, எந்தக் காரியம் செய்ய முற்பட்டாலும், எத்தகைய ஆபத்து நேரிட்டாலும், எவ்வித மனச்சோர்வு ஏற்பட்டாலும், ” மகாதேவ விஜயம் ” என்று உரக்கக் கூவி, சர்வமங்களத்தை மட்டும் அளிக்கும் எமையாளும் ஜெகதீசனைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

mahadevar - 2025

அந்த மகாதேவன் வந்துவிட்டால் அங்கு ஜயம் ஒன்றுதான் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் இருப்பதாலேயே ‘ மகாதேவ விஜயம், மகாதேவ ஜய ‘ மாக மாறிவிட்டது !. ‘ ஓம் நமசிவாய ‘ என்று தமிழகத்திலும், ‘ ஹர ஹர ஹர மகாதேவா ‘ என்று வடநாட்டிலும் பக்தர்கள் கோஷமிடும் ஈசுவரன் அங்கே வைஷ்ணவர்களிடையே ‘ மகாதேவ ஜய ‘ மாகக் களி நடனம் புரிகிறான்.

” அஞ்செழுத்திலே பிறந்து அஞ்சே ழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள் !
அஞ்செழுத்தி லோரெழுத்தை அறிந்துகூற வல்லீரேல்
அஞ்ச லஞ்ச லென்று நாதன் அம்பலத்தி லாடுமே ! “

(சைவம் ஆதிசங்கரர் அருளிய ஷண்மத ஸ்தாபனம் – சாஸ்தா பதிப்பக நூலில் இருந்து…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories