மகாதேவ ஜயம் !

shiva linga
shiva linga

– ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

மேலைக் கடலோரத்தில், அதாவது இன்றைய கன்னட தேசத்தில் ( மங்களூர் – உடுப்பி ) சுமார் கி.பி 14அம் நூற்றாண்டில் தீவிர வைஷ்ணவம் தோன்றலாயிற்று. த்வைத சித்தார்ந்த சிற்பியான ஸ்ரீ மத்வர், மத்வ சம்பிரதாயத்தைத் தோற்றுவித்தார். அதில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவே முழுமுதற் கடவுள், வேறு தெய்வம் எதுவுமில்லை.

ஸ்ரீ மத்வரின் சிஷ்ய பரம்பரையினரின் எழிய சீல வாழ்க்கையும் , சாஸ்திர ஞானமும் சாதாரன மக்களை வெகுவாக வசீகரித்தன. ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தத்தை ஏற்றிருந்த பல குடும்பங்களும் ஸ்ரீ மத்வரின் சம்பிரதாயத்திற்கு மாறின.

காலம் உருண்டோடியது. அத்வைதம் அப்பிரதேசத்திலிருந்து அறவே மறைந்திருந்தது. ஆனால் அத்வைத – தத்வ ரீதியில் சிவ-விஷ்ணு பேதமின்றி பக்தி செலுத்தி வந்த குடும்பங்கள் அந்நிலையிலும் மாறவில்லை – மாற முடியவுமில்லை. இன்றும் அங்கு சிவ-விஷ்ணு பேதம் பெயரளவிற்குத்தான் இருக்கிறதேயொழிய உள்மனதில் ஏதும் களங்கமின்றியே மக்கள் பக்தி செலுத்துகிறார்கள்.

மத்வ சம்பிரதாயத்தையொட்டி ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆராதனையை பக்தி சிரத்தையோடு செய்து வருபவர்கள், கூடவே சிவ ஆராதனையும் செய்கிறார்கள். இரத்தத்தில் ஊறிப்போன இப்பழக்கத்தின் காரணமாக அங்குள்ள பெரியோர்கள் பலர் சிவனை மனதின் அடித் தளத்தில் நிலைந்திருக்கச் செய்து, எந்தக் காரியம் செய்ய முற்பட்டாலும், எத்தகைய ஆபத்து நேரிட்டாலும், எவ்வித மனச்சோர்வு ஏற்பட்டாலும், ” மகாதேவ விஜயம் ” என்று உரக்கக் கூவி, சர்வமங்களத்தை மட்டும் அளிக்கும் எமையாளும் ஜெகதீசனைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

mahadevar - 2026

அந்த மகாதேவன் வந்துவிட்டால் அங்கு ஜயம் ஒன்றுதான் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் இருப்பதாலேயே ‘ மகாதேவ விஜயம், மகாதேவ ஜய ‘ மாக மாறிவிட்டது !. ‘ ஓம் நமசிவாய ‘ என்று தமிழகத்திலும், ‘ ஹர ஹர ஹர மகாதேவா ‘ என்று வடநாட்டிலும் பக்தர்கள் கோஷமிடும் ஈசுவரன் அங்கே வைஷ்ணவர்களிடையே ‘ மகாதேவ ஜய ‘ மாகக் களி நடனம் புரிகிறான்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

” அஞ்செழுத்திலே பிறந்து அஞ்சே ழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள் !
அஞ்செழுத்தி லோரெழுத்தை அறிந்துகூற வல்லீரேல்
அஞ்ச லஞ்ச லென்று நாதன் அம்பலத்தி லாடுமே ! “

(சைவம் ஆதிசங்கரர் அருளிய ஷண்மத ஸ்தாபனம் – சாஸ்தா பதிப்பக நூலில் இருந்து…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories