திருப்புகழ் கதைகள்: தலைவலி மருந்தீடு!

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் 232
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தலைவலி மருத்தீடு – பழநி

ஆதிசங்கரர் அருளிய ஸுப்ரமண்ய புஜங்கத்தில் வருகின்ற 25வது ஸ்லோகம் முருகனின் அருள் எப்படி நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றும் எனச் சொல்லுகிறது

अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த: |

பிஷாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே ||

என்பதாகும். இந்த ஸ்லோகத்துல அபஸ்மாரம், குஷ்டம், க்ஷயார்சம், ப்ரமேஹம், ஜ்வரம்,குல்மாதி ரோகா: .. இத்தனை ரோஹங்களைச் சொல்றார்.

வலிப்பு, குஷ்டம், க்ஷயம், சுவாச ரோகம், மேஹ ரோகம், ஜ்வரம், சித்த பிராந்தி, வயிற்று வலி இப்படிப் பல விதமான வியாதிகள் உடம்பைப் படுத்துகிறது. மனதில் இருக்கிற கவலைகளாவது அது பாட்டுக்கு இருக்கும். அந்தக் கவலைகளோடு நாம் நமது செயல்களைச் செய்துகொண்டு இருக்கலாம். உடல் நோய் ஏற்பட்டால், நோயில் படுத்துவிட்டால், வாழ்க்கையே அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஒரு விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் படுத்திருப்பவர்களைக் கேளுங்கள்; கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு இருக்கும் நபரைக் கேளுங்கள். அவர்கள் இதன் வேதனையைச் சொல்லுவார்.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

அப்படி உடம்புக்கு வருகிற வியாதிகளை எல்லாம் போக்குவதற்கு ஒரு உபாயம் உள்ளது. அது என்னவென்றால் திருச்செந்தூர்ல பன்னீர் இலையில் வைத்துக் கொடுக்கின்ற விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டால் எல்லா வியாதிகளும், ஒரு க்ஷணத்தில் ஓடி மறைந்து விடுகின்றன.

நமது சென்னைக்குப் பக்கத்தில உள்ள திருத்தணி முருகரை பவரோக வைத்யநாத பெருமாள் எனச் சொல்லுவார்கள். இத்திருப்புகழில் வருகின்ற வரிகளான

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே

என்ற வரிகளின் மூலம் – தலைவலி, வசியம் போன்றைவகளுக்கான மருந்திடுதலினால் வரும் நோய்கள், காமாலை, சோகை ஆகிய நோய்கள், வெப்பு நோய், கண்ணோய், வறட்சி, வயிற்று வலியைத் தரக்கூடிய சூலை நோய், சுவாச மண்டலத்தில் வரக்கூடிய காச நோய், நிரிழிவு நீயாகிய அதிசலம், கொடிய விஷநோய்கள், மாயா விகராத்தால் (காமவிகாரத்தால்) வரும் நோய்கள் முதலியவை அடியேனை வந்து அணுகாமலிருக்கவும், இந்நிலவுலகின் மேல் இருக்கின்ற வைத்தியர்களிடம் சென்று, மேற்கூறிய நோய்களின் துன்பத்தையும் அந்நோய்களின் பேரையும் விவரமாக எடுத்துச் சொல்லி, இந்நோய்களை நீக்குவீர். என்று சொன்னால், அவ்வைத்தியர்கள் நான் சொன்னது காதில் விழாதது போல் இருந்து, “வயதின் முதிர்ச்சியால் நோய்கள் வருகின்றன. ஆதலால் அப்படி தளர்ந்து கொண்டே வரும் உடலை பழையபடி இளமையாக மாற்ற நீங்கள் எனக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர் சொல்லுங்கள்” என்று சொல்லவும், அதனைக் கேட்கும்படி அடியேனை அந்த வகையில் வைத்தியரிடம் சென்று அலையுமாறு விதியாமல் முருகப் பெருமானெ எனக்கு அருள்புரிவாயாக என அருணகிரியார் இவ்வரிகளில் வேண்டுகிறார்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

புகழ்பெற்ற திருச்செந்தூர் கந்தர் சஷ்டி கவசத்தில்

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி . . . . . . . . . .

என்று சொல்லப்படுகிறது. முருகனை நினைத்தால் முற்றிய வினைகள் பறந்தோடும். எனவே அன்பு நண்பர்களே, உங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் முருகன் கோயிலில் வழிபாடு செய்யுங்கள். இன்பத்திலும் துன்பத்திலும் அவனையே சரணடையுங்கள். திருமுருகாற்றுப்படையில் சொல்லியது போல

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன்
பன்னிருகைக் கோலப்பா
வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா
செந்தி வாழ்வே!

என்று அவனைச் சரணடையுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories