சிவனடியார்களை அவமதித்த தென்காசி கோயில் நிர்வாகம்; கண்டித்து இந்து முன்னணி போராட்டம்!

hindumunnani protest in tenkasi temple - 2026

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிவனடியார்களோடு இந்து முன்னணி திருவாசகம் பாடி போராட்டம் நடத்தினர்.

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் கடந்த வாரம் திருவாசகம் பாடிய சிவனடியார்களிடம் பணம் செலுத்த வலியுறுத்தி அவதூறாக பேசி வெளியேற்றியதாக கருதி, அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு சிவனடியார்கள் மற்றும் இந்து முன்னணி யினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்திருந்தனர்.

போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் அங்கிருந்து புறப்பட்டு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில், இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன்,  தென்காசி மாவட்ட சிவனடியார் திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் கயிலை கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றனர்.

அங்கு காசி விஸ்வநாதரை சிவாயநம நாமாவளி பாடி வலம் வந்துபலீபீடம் அருகில் அமர்ந்து திருவாசகம் பாடினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது கடந்த வாரம் சிவனடியார்களை அவதூறாகப் பேசி வெளியேற்றிய திருக்கோவில் நிர்வாகத்தினர் யாரும் தடுக்கவில்லை.

பல ஆண்டுகளாக நடை பெற்றுவரும் வழக்கம் போல் திருவாசகம் பாடுவோம் என்றும் தடுத்தால்போராட்டம் நடத்துவோம் என்றும் சிவனடியார் பெருமக்களோடு இந்து முன்னணி உறுதுணையாக நிற்கும் என மாநிலத் துணைத் தலைவர் பேசினார். 

நிகழ்ச்சியில் இந்து முன்னணி தென்காசி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர்கள் பால்ராஜ், குளத்தூரான், உலகநாதன், ஆறுமுகம், கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவா, மாரியப்பன், பெரியகாசி, திருமலை, மாரிமுத்து, ஈஸ்வரன் தென்காசி நகரத் தலைவர் நாராயணன், செங்கோட்டை நகர தலைவர் மாசானம் செங்கோட்டை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, சுரண்டை நகர தலைவர் நாராயணன், தென்காசிநகர செயலாளர் சொர்ணசேகர் பாலாஜி நகர செயற்குழு உறுப்பினர் மணி, சிவனடியார் திருக்கூட்டத்தைச் சார்ந்த சத்தியபாமா உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories