திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டுவிழா..

Published:

IMG 20220714 WA0150 1 - 2026
IMG 20220714 WA0146 1 - 2026
IMG 20220714 WA0156 - 2026

108 திவ்ய தேசங்களில் மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்து புதிய சொர்ண கொடிமரம் பிரதிஷ்டை செய்து ஆராட்டு உற்சவம் வேதபாராயண முறைப்படி நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆதிகேசவனை தரிசனம் செய்து அருள் பெற்று செல்கின்றனர்.

IMG 20220715 WA0074 - 2026

108 திவ்ய தேசங்களில் ஒன்றும் மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி முதல் 6 நாட்கள் சிறப்பு திருவிழா புதிய தங்கமுலாம் பூசப்பட்ட 72 – அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி நடைபெற்றது. தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன

புதன் கிழமை 5- ம் திருவிழாவில் சிறப்பு பூஜைகளும் இரவு 10 மணிக்கு சாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலின் ஈசான மூலையில் அரச மரத்தின் அருகே வேட்டை தளம் அமைக்கப்பட்டு அதில் பள்ளி வேட்டை நடந்தது.

IMG 20220714 WA0160 - 2026
IMG 20220714 WA0158 1 - 2026

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வியாழக்கிழமை காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பரளியாற்று கடவில் சாமிக்கு ஆராட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.கொட்டும் மழையோடு சுவாமி ஆராட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மதியம் 12 மணிக்கு கலாபிஷேகம், ஸ்ரீ பூதபலி பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து தங்க கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் சிறப்பு திருவிழாக்கான பூஜைகள் நிறைவு பெற்றது.குமரி திருவனந்தபுரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான இக்கோவிலில் தினசரி ஐதீக முறைப்படி பூஜைகள் நடைபெறும்.இக்கோயிலுக்கு திருநெல்வேலி ஆரல்வாய்மொழி நெடுமங்காடு வழித்தடத்திலும், நாகர்கோயில் தக்கலை வழியாகவும் , திருவனந்தபுரம் மார்த்தாண்டம் வழியாகவும்,குற்றாலம் செங்கோட்டையில் இருந்து இயற்கை எழில் சூழ்ந்த மலை வான்வழிப் பாதையில் ஆரியங்காவு குளத்துப்புழா நெடுமங்காடு நெட்டா குலசேகரம் வழியாகவும் செல்லலாம்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img