
சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானிடம் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடி வைத்து படைக்கப்பட்டது. பின்னர் கோயில் செயலாளர் சிஎஸ்எஸ் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.






