
மும்பை: ஐபிஎல்-10 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியினர் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து நன்றி தெரிவித்தனர்.
ஐ.பி.எல்.-10 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் மூன்று முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. அந்த அணிக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்பட்டது. கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணியினர் மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றன. கோப்பையுடன் சென்ற அவர்களுடன் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர். கோப்பையை விநாயகரிடம் வைத்து பூஜித்து, நன்றி தெரிவித்தனர்.


