IPL 2022: சென்னை vs ராஜஸ்தான்

ipl 2022 - 2026

ஐ.பி.எல்: – சென்னை vs ராஜஸ்தான்

  • K.V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஐபிஎல்லின் 68ஆவது ஆட்டம் மும்பை ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது. சென்னை அணியை (150/6, மொயின் அலி 93, தோனி 26, சாஹல் 2/26, மெகாய் 2/20) ராஜஸ்தான் அணி (151/5, ஜெய்ஸ்வால் 59, அஷ்வின் 40, பிரஷாந்த் சொலங்கி 2/20) 5 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீர்ர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரில், கடைசி பந்தில் இரண்டு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கான்வேயுடன் மொயின் அலி இணைந்தார். நான்காவது ஓவரில் மொயின் அலி மூன்று ஃபோர், ஒரு சிக்சர் அடித்தார். அஷ்வின் வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்சர் அடித்தார்.

ஆறாவது ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார்; அந்த ஓவரில் மொயின் அலி ஒரு சிக்சர், ஐந்து ஃபோர் அடித்தார். எனவே பவர்ப்ளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 75 ரன் எடுத்திருந்தது. இந்த வேகத்திற்கு சென்னை அணி ஆடியிருந்தால் 20 ஓவரில் 250 ரன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் திறமையாகப் பந்து வீசினார்கள்.

கான்வே (16 ரன்), ஜெகதீசன் (1 ரன்), அம்பாடி ராயடு (3 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து வேகமாக ஆட்டமிழந்தனர். அம்பாடி ராயடு ஆட்டமிழந்த பின்னர் மூன்று ஃபோர் மற்றும் ஒரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 150 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதன் பின்னர் ஆடவந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், அதிரடி ஆட்டக்காரர், இந்த ஐபிஎல்லில் இதுவரை அதிக ரன் அடித்துள்ள ஜாஸ் பட்லர் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீரகள் சஞ்சு சாம்சன் (20 பந்துகளில் 15 ரன்), படிக்கல் (9 பந்துகளில் 3 ரன்), ஹெட்மயர் (ஆறுபந்துகளில் 7 ரன்) சரியாக விளையாடவில்லை. படிக்கல் ஆட்டமிழந்தபோது அஷ்வின் விளையாட வந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 76/3.

அதற்கடுத்து ஜெய்ஸ்வால் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 104/4; ஹெட்மயர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 112/5.

அஷ்வின் அப்போது 21 ரன் அடித்திருந்தார். அந்த நிலையில் இருந்து பொறுப்புடன் விளையாடி, 40 ரன் அடித்து, அஷ்வின் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

அவர் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். சென்னை அணியை 150 ரன்களுக்குள் சுருட்டியபோதே ராஜஸ்தான் அணி தகுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது. இறுதியாக வெற்றிபெற்ற பின்னர் இரண்டாம் இடத்திற்கு வந்துவிட்டது.

மூன்றாம் இடம் லக்னோ அணிக்கு. நான்காம் இடம் யாருக்கு என்பதை நாளை நடைபெற உள்ள மும்பை, டெல்லி அணி மேட்ச் தீர்மானிக்கும்.

டெல்லி அணி வெற்றி பெற்றால் அது தகுதி பெறும். தோல்வியுற்றால் பெங்களூரு அணி தகுதிபெறும். ராஜஸ்தான் அணி முதல் தகுதி ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்த்து விளையாடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories