காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் – மூன்றாம் நாள்
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியம்-
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை, மூன்றாம் நாள் பளு தூக்குதலில் ஜெரிமி வென்ற தங்கப் பதக்கத்தோடு நாள் தொடங்கியது. அவருக்குப் பின் அச்சிந்தா ஷூலி 73 கிலோ பிரிவு பளுதூக்குதலில் மேலும் ஒரு தங்கம் வென்றார். ஆண்கள் ஹாக்கி அணி கானா அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர், 92 கிலோ எடைப் பிரிவில் அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளார். மிடில் வைட் பிரிவில் இந்திய வீரர் சுமித் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்றுப் போனார். 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்குச் சென்றார்.
பாட்மிண்டன் பிரிவில் இந்திய கலப்பு அணி அரையிறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. சௌரவ் கோஷல் ஸ்குவாஷ் போட்டியில் காலிறுதிக்குச் சென்றிருக்கிறார். ஜொஷ்னா சின்னப்பா பெண்கள் பிரிவில் காலிறுதிக்குச் சென்றுள்ளார். லான் பௌல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்குச் சென்றுள்ளது. பெண்கள் அணி காலிறுதியில் தோற்று போட்டியை விட்டு வெளியேறியது நினைவிருக்கலாம்.
பாட்மிண்டன் அணியின் வெற்றிப் பயணம்
இந்திய பாட்மிண்டன் அணியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோ விளையாடுகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஆகர்ஷி கஷ்யப் இருவரும் ஆடிகின்றனர்.
ஆண்களி இரட்டையர் பிரிவில் சாத்விக் சாயிராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோரும் பெண்கள் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் திரிஷா ஜாலி இருவரும் கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா இருவரும் விளையாடுகின்றனர்.
இது குரூப் A, B, C, D ஆகிய மூன்று பிரிவுகளில் நடக்கிறது. குரூப் A பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. குரூப் B பிரிவில் இங்கிலாந்து, சிங்கப்பூர், மொரீஷியஸ், பார்படாஸ் ஆகிய அணிகளும் குரூப் C பிரிவில் கனடா, ஸ்காட்லாந்து, மாலத்தீவுகள், உகாண்டா ஆகைய நாடுகள் உள்ளன. குரூப் D தற்போதைய சாம்பியன் மலேஷியா, தென் ஆப்பிரிக்கா, ஜமைக்கா, ஜாம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.
குரூப் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கிலும், இலங்கையை 5-0 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கிலும் தோற்கடித்தது குரூப்பில் முதலிடம் வகித்தது. காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் மோதி 3-0 என்ற கணக்கில் வென்றது.
இனி அரையிறுதிப்போட்டியில் இன்று (ஆகஸ்டு 1) சிங்கப்பூருடன் மோதவிருக்கிறது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மலேஷியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.