44ஆவது செஸ் ஒலிம்பியாட்; பத்தாவது சுற்று!

chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம் பத்தாவது சுற்று – 08.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா A ஆண்கள் அணி இன்று பத்தாவது சுற்றில் இரான் அணியோடு விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. விதித் குஜராதி, எஸ்.எல். நாராயணன் இருவரும் வெற்றி பெற்றனர். எரிகைசி அர்ஜுன் தனது ஆட்டத்தை ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். ஹரிகிருஷ்ணா தோல்வியுற்றார்.

இந்தியா B ஆண்கள் அணி இன்று உஸ்பெஸ்கிஸ்தான் அணியுடன் விளையாடி 2-2 என்ற கணக்கில் போட்டியைச் சமன் செய்தது. பிரக்ஞானந்தா தோல்வியுற்றார். குஹேஷ் இன்று தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். சரின் நிஹாலும் அதிபனும் ட்ரா செய்தனர்.

இந்தியா C ஆண்கள் அணி ஸ்லோவாகியா அணியோடு விளையாடி, 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்தது. அபிமன்யு வெற்றி பெற்றார். கங்குலியும் கார்த்திக் முரளியும் ட்ரா செய்தனர். சேதுராமன் தோல்வியடைந்தார்.

இந்தியா A பெண்கள் அணி கசகஸ்தான் அணியுடன் விளையாடி 3.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியடைந்தது. இந்திய அணியில் வைஷாலி ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். கோனேரு ஹம்பி, தானியா சச்சதேவ், பக்தி குல்கர்ணி ஆகிய மூவரும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர்.

இந்தியா B பெண்கள் அணி நெதர்லாந்து அணியுடன் விளையாடி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்திய அணியின் பத்மினி, மேரி ஆன் கோம்ஸ், திவ்யா ஆகிய மூவரும் இன்று வெற்றி பெற்றனர். வந்திகா தோல்வியடைந்தார். இந்தியா C பெண்கள் அணி ஸ்வீடன் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. நந்திதாவும் ப்ரத்யுஷாவும் வெற்றி பெற்றனர். ஈஷாவும் வர்ஷிணியும் ட்ரா செய்தனர்.

ஆண்கள் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆர்மேனியா 17 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியா B அணி 16 புள்ளிகளுடனும் இந்தியா A அணி 16 புள்ளிகளுடனும் முறையே மூன்று, நான்காம் இடத்தில் உள்ளன.

இந்தியா C அணி 13 புள்ளிகளுடன் 28ஆவது இடத்தில் உள்ளது. பெண்கள் பிரிவில் இந்தியா A அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா B அணி 15 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், இந்தியா C அணி 15 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன. ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவுகளிலும் இன்னும் பதக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories