மகளிர் ஐபிஎல் போட்டிகள் 2023

women ipl - 2026

மகளிர் ஐபிஎல் போட்டிகள் 2023

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

இந்திய கிரிக்கட் போர்ட் இந்த ஆண்டு முதல் ஆண்கள் ஐ.பி.எல் போலவே பெண்கள் ஐ.பி.எல் நடத்துகிறது. இதற்கு ‘டாடா மகளிர் ஐ.பி.எல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மார்ச்சு மாதம் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மார்ச்சு 26ஆம் தேதி முடியவிருக்கின்றன. கோப்பையை வெல்கின்ற அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது.

இந்த முதலாமாண்டு போட்டிகளைப் பெண்கள் பார்க்க டிக்கட் கட்டணம் கிடையாது. தொடக்க விழா மார்ச்சு மாதம் 4ஆம் தேதி டி.ஒய். படீல் மைதானத்தில் நடைபெற்றது. ஏ.பி. தில்லான், கீர்த்தி சனான், கியாரா அத்வானி ஆகியோர் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். போட்டிகள் மும்பையின் ப்ராபோர்ன் மற்றும் டி.ஒய். பட்டீல் மைதானங்களில் நடைபெறுகிறது.

போட்டியில் பின்வரும் அணிகள் கலந்துகொள்கின்றன:
(1) டெல்லி கேபிடல்ஸ் – அணித்தலைவி மேக் லேனிங், ஆஸ்திரேலிய வீராங்கனை
(2) குஜராத் ஜெயிண்ட்ஸ் – அணித்தலைவி பெத் மூனி, ஆஸ்திரேலிய வீராங்கனை
(3) மும்பை இந்தியன்ஸ் – அணித்தலைவி ஹர்ம்ப்ரீத் கௌர், இந்திய வீராங்கனை
(4) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – அணித்தலைவி ஸ்மிருதி மந்தனா, இந்திய வீராங்கனை
(5) உ.பி. வாரியர்ஸ் – அணித்தலைவி அலிசா ஹீலி, ஆஸ்திரேலிய வீராங்கனை
தொடக்கச்சுற்றில் போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றன. ஐந்து அணிகளும் தலா எட்டு போட்டிகள் விளையாடியுள்ளன. ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் இரண்டு முறை விளையாடியுள்ளன. முதல் மூன்று இடம் பிடிக்கும் அணிகள் அடுத்த இறுதிச் சுற்றிற்குச் செல்கின்றன.

தொடக்கச் சுற்று மார்ச்சு 20ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச்சு 20ஆம் தேதி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகள் தொடரின் முதல் மூன்று இடம் பிடிக்கும் அணிகளை முடிவுசெய்தௌ என்பது சிறப்பான செய்தி.
தொடக்கத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய மும்பை அணி கடைசி ஆட்டங்கள் இரண்டில் தோல்வியுற்று 12 புள்ளிகளுடன், குறைவான ரன் ரேட்டால் இரண்டாமிடம் பிடித்தது. டெல்லி அணி 12 புள்ளிகளுடன் சிறப்பான ரன்ரேட்டால் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

உ.பி வாரியர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தது. இந்த அணி வருகிற 24ஆம் தேதி டி.ஒய். பட்டீல் மைதானத்தில் மும்பை அணியை எதிர்த்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் இறுதிப்பொட்டியில், 26ஆம் தேதி ப்ரபோர்ன் மைதானத்தில் விளையாடும்.

இதுவரை விளையாடிய போட்டிகளில் மேக் லேனிங் 310 ரன்கள் அடித்து பேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் 14 விக்கட்டுகள் எடுத்து சோஃபி முதலிடத்தில் இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories