IPL 2025: சென்னை அணி த்ரில் வெற்றி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs சென்னை – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – 07.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (179/6, அஜிங்க்யா ரஹானே 48, ஆண்ட்ரூ ரசல் 38, மனிஷ் பாண்டே 36, சுனில் நரேன் 26, நூர் அகமது 4/31, அன்ஷுல் காம்போஜ் 1/38, ஜதேஜா 1/34) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (19.4 ஓவர்களில் 183/8, டிவால்ட் பிரிவிஸ் 52, ஷிவம் துபே 45, உர்வில் படேல் 31, ஜதேஜா 19, தோனி ஆட்டமிழக்காமல் 17, வைபவ் அரோரா 3/48, ஹர்ஷித் ராணா 2/43, வருன் சக்ரவர்த்தி 2/18, மொயின் அலி 1/23) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (9 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேன் (17 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானே (33 பந்துகளில், 48 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து 7.1 ஓவர் வரை விளையாடினார்.

 ரகுவன்ஷி (1 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை. அவருக்குப் பின் வந்த மணீஷ் பாண்டே (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஆண்ட்ரூ ரசல் (21 பந்துகளில் 38 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். 18.3ஆவது ஓவரில் ரிங்கு சிங் விளையாடவந்தார். 6 பந்துகளில் 9 ரன் அடித்தார். இப்படியாக கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

விக்கட் எடுக்கவில்லை என்றாலும் அஷ்வின் இன்று சிறப்பாக பந்துவீசினார். மற்ற சுழப் பந்துவீச்சாளர்களான ஜதேஜா மற்றும் நூர் அகமது இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள்.

          180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆயுஷ் மஹத்ரே (பூஜ்யம் ரன்) மற்றும் டேவன் கான்வே (பூஜ்யம் ரன்) இருவரும் முதல் இரண்டு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த, இன்று முதன்முறை ஆடுகின்ற உர்வில் படேல் (11 பந்துகளில் 31 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடனினார்.

நாலாவதாகக் களமிறங்கிய அஷ்வின் (8 ரன்) 7 பந்துகள் மட்டுமே தாகுப்பிடித்தார். அதன் பின்னர் ஜதேஜா (10 பந்துகளில் 19 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) வெகுநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தோற்றுவிடுமோ என்ற அச்சத்தில் ரசிகர்கள் இருக்க, அடுத்து வந்த டிவால்ட் பிரிவிஸ் (25 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) அதிரடி ஆட்டம் ஆடினார்.

அவர் ஷிவம் துபே (40 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) உடன் இணைந்து வெற்றியை சாத்தியப்படுத்தினார். 18ஆவது ஓவர் முடிவில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என இருந்தது. அந்த ஓவரில் ஷிவம் துபே ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் நூர் அகமது ஆட்டமிழந்தார்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

20ஆவது ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தில் தோனி ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் தோனி ஒரு ரன் எடுத்தார். புதிய பேட்ஸ்மென் அன்ஷுல் காம்போஜ் அடுத்த மூன்று பந்துகளையும் சந்தித்து வெற்றிக்குத் தேவையான ஒரு ரன்னை எடுக்க வேண்டும். அச்சமயத்தில் காம்போஜ் ஒரு ஃபோர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

          சென்னை அணியின் சுழல்பந்துவீச்சாளர் நூர் அகமது ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றிக்குப் பின்னரும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது,

கொல்கொத்தா அணியின் பிளேஆஃப் வாய்ப்பு குறைந்துள்ளது. பிளேஆஃபுக்குச் செல்ல கொல்கொத்தா அணி அடுத்த இரண்டு மேட்சுகளில் வெற்றி பெற்று, பிற அணிகளின் வெற்றி, தோல்விக்காகக் காத்திருக்க வேண்டும்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories