December 5, 2025, 1:34 AM
24.5 C
Chennai

IPL 2025: பிளேஆஃப் வாய்ப்பை இழந்த லக்னோ

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs ஹைதராபாத் – லக்னோ – 19.05.2025

லக்னோ பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (205/7, மிட்சல் மார்ஷ் 65, எய்டன் மர்க்ரம் 61, நிக்கோலஸ் பூரன் 45, ஈஷன் மலிங்கா 2/28, ஹர்ஷ் துபே, நித்தீஷ் குமார் ரெட்டி , ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கட், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (206/4, அபிஷேக் ஷர்மா 59, ஹென்றி கிளாசன் 47, இஷான் கிஷன் 35, கமிந்து மெண்டிஸ் 32, அதர்வா டைடே 13, திக்வேஷ் ரத்தி 2/37, வில் ஓ ரூர்கே, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் லக்னோ அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ் (39 பந்துகளில் 65 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் எய்டன் மர்க்ரம் (38 பந்துகளில் 61 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் அற்புதமான தொடக்கம் தந்தனர். ரிஷப் பந்த் (7 ரன்) இந்த ஆட்டத்திலும் சரியாக ஆடவில்லை. நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 45 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினார். இவருக்குப் பின்னர் வந்த ஆயுஷ் பதோனி (3 ரன்), அப்துல் சமத் (3 ரன்), ஷர்துல் தாகூர் (4 ரன்), ரவி பிஷ்னோய் (ஆட்டமிழக்காமல் 4 ரன்), ஆகாஷ் தீப் (ஆட்டமிழக்காமல் பூஜ்யம் ரன்) வேகமாக ரன் சேர்க்கும் முயற்சியில் வந்தது ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

          206 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அவர்களது தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் இன்று விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அதர்வா டைடே (13 ரன்) விளையாடினார். அவர் இரண்டாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சன்ரைசர்ஸ் அணி ஜெட் வேகத்தில் ரன் சேர்த்தது.

அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் அரைச் சதம் அடித்தார். அபிஷேக் ஷர்மா (20 பந்துகளில் 59 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்), இஷான் கிஷன் (28 பந்துகளில் 35 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஹென்றி கிளாசன் (28 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் (21 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர்) ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

இடையில் அபிஷேக் ஷர்மாவுக்கும் திக்வேஷ் ரத்திக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு அதற்காக திக்வேஷ் 50% ஆட்டச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலு ஒரு ஆட்டம் ஆட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அபிஷேக் ஷர்மாவுக்கு 25% ஆட்டச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது. இறுதில் 18.2 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

          அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி லக்னோ பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதைத் தடுத்துவிட்டது.

இனி பிளே ஆஃப்க்குச் செல்லும் அணி மும்பையா அல்லது டெல்லியா என்பது தீர்மானிக்கப்படவேண்டும்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories