அர்ஜூனா விருதுக்கு தமிழக வீரர் பரிந்துரை

07 Sep17 Aurna award - 2026

கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்தாண்டுக்கான இவ்விருதுக்கு அனைத்து விளையாட்டு பிரிவுகள் சார்பில் வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டனர். இதில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பேட்மின்டன் வீரர் கிடாம்பி காந்த் ஆகியோரின் பெயர்களை விருதுக்கமிட்டி தேர்வு செய்து மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் விருது பெறுவோரை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தேர்வு செய்வார்.

29 வயதாகும் கோஹ்லி 2016ம் ஆண்டிலும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் தேர்வுக்கமிட்டியின் இறுதிப் பட்டியலில் அப்போது கோஹ்லியின் பெயர் இடம் பெறவில்லை. தற்போது மிகச்சிறப்பான பார்மில் உள்ள கோஹ்லி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர்-1 வீரராக இருக்கிறார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார். இம்முறை கோஹ்லி தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கர் (1997), மகேந்திர சிங் டோனி (2007) ஆகியோருக்குப் பிறகு கேல் ரத்னா விருதை பெறும் 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறலாம். முன்னதாக கடந்த ஆண்டு கோஹ்லிக்கு பத்ம  விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மீராபாய் சானு கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டிலும் அவர் தங்கத்தை கைப்பற்றினார். சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் காயம் காரணமாக சானு பங்கேற்கவில்லை. விருது வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

அர்ஜூனா விருதுக்கு 20 வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் தேர்வாகி உள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர், வீராங்கனைகள்: நீரஜ் சோப்ரா (வில்வித்தை), ஜின்சன் ஜான்சன் (தடகளம்), ஹிமா தாஸ் (தடகளம்), சிக்கி ரெட்டி (பேட்மின்டன்), சதிஷ் குமார் யாதவ் (குத்துச்சண்டை), ஸ்மிரிதி மந்தனா (கிரிக்கெட்), சுபன்கர் ஷர்மா (கோல்ப்), மன்பிரீத் சிங் (ஹாக்கி), சவிதா புனியா (ஹாக்கி), ரவி ரத்தோர் (போலோ), ரஹி சர்னோபட் (துப்பாக்கி சுடுதல்), அங்குர் மிட்டல் (துப்பாக்கி சுடுதல்), ஷிரேயாசி சிங் (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்), ஸ்மித் (மல்யுத்தம்), பூஜா காடியன் (வுஷூ), அங்குர் தமா (பாரா தடகளம்), மனோஜ் சர்கார் (பாரா பேட்மின்டன்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories