December 5, 2025, 6:12 PM
26.7 C
Chennai

அர்ஜூனா விருதுக்கு தமிழக வீரர் பரிந்துரை

07 Sep17 Aurna award - 2025

கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்தாண்டுக்கான இவ்விருதுக்கு அனைத்து விளையாட்டு பிரிவுகள் சார்பில் வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டனர். இதில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பேட்மின்டன் வீரர் கிடாம்பி காந்த் ஆகியோரின் பெயர்களை விருதுக்கமிட்டி தேர்வு செய்து மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் விருது பெறுவோரை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தேர்வு செய்வார்.

29 வயதாகும் கோஹ்லி 2016ம் ஆண்டிலும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் தேர்வுக்கமிட்டியின் இறுதிப் பட்டியலில் அப்போது கோஹ்லியின் பெயர் இடம் பெறவில்லை. தற்போது மிகச்சிறப்பான பார்மில் உள்ள கோஹ்லி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர்-1 வீரராக இருக்கிறார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார். இம்முறை கோஹ்லி தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கர் (1997), மகேந்திர சிங் டோனி (2007) ஆகியோருக்குப் பிறகு கேல் ரத்னா விருதை பெறும் 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறலாம். முன்னதாக கடந்த ஆண்டு கோஹ்லிக்கு பத்ம  விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மீராபாய் சானு கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டிலும் அவர் தங்கத்தை கைப்பற்றினார். சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் காயம் காரணமாக சானு பங்கேற்கவில்லை. விருது வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

அர்ஜூனா விருதுக்கு 20 வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் தேர்வாகி உள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர், வீராங்கனைகள்: நீரஜ் சோப்ரா (வில்வித்தை), ஜின்சன் ஜான்சன் (தடகளம்), ஹிமா தாஸ் (தடகளம்), சிக்கி ரெட்டி (பேட்மின்டன்), சதிஷ் குமார் யாதவ் (குத்துச்சண்டை), ஸ்மிரிதி மந்தனா (கிரிக்கெட்), சுபன்கர் ஷர்மா (கோல்ப்), மன்பிரீத் சிங் (ஹாக்கி), சவிதா புனியா (ஹாக்கி), ரவி ரத்தோர் (போலோ), ரஹி சர்னோபட் (துப்பாக்கி சுடுதல்), அங்குர் மிட்டல் (துப்பாக்கி சுடுதல்), ஷிரேயாசி சிங் (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்), ஸ்மித் (மல்யுத்தம்), பூஜா காடியன் (வுஷூ), அங்குர் தமா (பாரா தடகளம்), மனோஜ் சர்கார் (பாரா பேட்மின்டன்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories