December 5, 2025, 4:07 PM
27.9 C
Chennai

ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது வங்கதேசம்

01 Sep27 Cricket - 2025

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளது. பைனலில் இந்தியாவை நாளை எதிர்கொள்ள உள்ளது வங்கதேசம். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இத்தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை எளிதில் பறிகொடுத்தனர். பின்னர் வந்த முஷ்பிகுர் ரஹிம் முகமது மிதுனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இறுதியில் அந்த அணி 48. 5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 99, முகமது மிதுன் 60 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் 4 விக்கெட்டும் ஷாகின் அப்ரிதி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. வங்கதேச அணி பந்துவீச்சில் அனல் பறந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. இமாம் உல் ஹக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசிப் அலி 31 ரன்னும், அனுபவ வீரர் சோயிப் மாலிக் 30 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

வங்கதேச அணி சார்பில் முஸ்தபிஷூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும், மெஹித் ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 99 ரன்கள் விளாசிய முஷிஃபிகுர் ரஹிம் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தோல்வியை அடுத்து ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது வங்கதேசம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories