இந்தியா- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே சிட்னியில் நாளை நடைபெற உள்ள 3-வது மற்றும் கடைசி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடக்கிறது.
அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் 37 ரன்னிலும், மெல்போர்னில் நடந்த 2–வது ஆட்டத்தில் 27 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் நாளைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனையுடன் ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கும் 4-வது 20 ஓவர் இதுவாகும். இந்திய அணி இங்கு 20 ஓவரில் ஆடுவது இல்லை


