February 20, 2026, 1:58 AM
26.4 C
Chennai

தண்ணீர் பிரச்சனை: தமிழக, கேரளா முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம், பரம்பி குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு பிரச்சனை இருந்து வருகிறது.

இரு மாநிலங்களுக்கிடையே நடந்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது இரு மாநில தண்ணீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக முதல்- அமைச்சர் மற்றும் கேரள முதல்-மந்திரி இருவரும் கடந்த 26-ந்தேதி சந்திப்பதாக கூறப்பட்டது. 26-ந்தேதி தனக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் இந்த தேதியை மாற்றி வைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இன்று இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாலை 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இரு மாநில முதல்-மந்திரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் பரம்பிகுளம்- ஆழியாறு ஒப்பந்தம் குறித்து பேசப்பட உள்ளது. பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தம் 1970-ல் போடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

எனவே எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் இருவரும் சந்தித்து பேசும்போது இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து ஏற்கனவே கேரள மந்திரி கிருஷ்ணன் குட்டியை தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.

அப்போது இரு மாநிலங்கள் இடையிலான நதி நீர் பங்கீடு மற்றும் தண்ணீர் பிரச்சனை குறித்து சுமூக உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில்தான் அடுத்த கட்டமாக இரு மாநில முதல்-மந்திரிகளும் சந்தித்து பேச உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories