தண்ணீர் பிரச்சனை: தமிழக, கேரளா முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம், பரம்பி குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு பிரச்சனை இருந்து வருகிறது.

இரு மாநிலங்களுக்கிடையே நடந்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது இரு மாநில தண்ணீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக முதல்- அமைச்சர் மற்றும் கேரள முதல்-மந்திரி இருவரும் கடந்த 26-ந்தேதி சந்திப்பதாக கூறப்பட்டது. 26-ந்தேதி தனக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் இந்த தேதியை மாற்றி வைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இதையடுத்து இன்று இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாலை 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இரு மாநில முதல்-மந்திரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் பரம்பிகுளம்- ஆழியாறு ஒப்பந்தம் குறித்து பேசப்பட உள்ளது. பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தம் 1970-ல் போடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

எனவே எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் இருவரும் சந்தித்து பேசும்போது இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து ஏற்கனவே கேரள மந்திரி கிருஷ்ணன் குட்டியை தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.

அப்போது இரு மாநிலங்கள் இடையிலான நதி நீர் பங்கீடு மற்றும் தண்ணீர் பிரச்சனை குறித்து சுமூக உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில்தான் அடுத்த கட்டமாக இரு மாநில முதல்-மந்திரிகளும் சந்தித்து பேச உள்ளனர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories