December 5, 2025, 4:27 PM
27.9 C
Chennai

தண்ணீர் பிரச்சனை: தமிழக, கேரளா முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம், பரம்பி குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு பிரச்சனை இருந்து வருகிறது.

இரு மாநிலங்களுக்கிடையே நடந்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது இரு மாநில தண்ணீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக முதல்- அமைச்சர் மற்றும் கேரள முதல்-மந்திரி இருவரும் கடந்த 26-ந்தேதி சந்திப்பதாக கூறப்பட்டது. 26-ந்தேதி தனக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் இந்த தேதியை மாற்றி வைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இன்று இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாலை 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இரு மாநில முதல்-மந்திரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் பரம்பிகுளம்- ஆழியாறு ஒப்பந்தம் குறித்து பேசப்பட உள்ளது. பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தம் 1970-ல் போடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

எனவே எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் இருவரும் சந்தித்து பேசும்போது இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து ஏற்கனவே கேரள மந்திரி கிருஷ்ணன் குட்டியை தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.

அப்போது இரு மாநிலங்கள் இடையிலான நதி நீர் பங்கீடு மற்றும் தண்ணீர் பிரச்சனை குறித்து சுமூக உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில்தான் அடுத்த கட்டமாக இரு மாநில முதல்-மந்திரிகளும் சந்தித்து பேச உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories