தண்ணீர் பிரச்சனை: தமிழக, கேரளா முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை

இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தமிழகத்திற்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம், பரம்பி குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு பிரச்சனை இருந்து வருகிறது.

இரு மாநிலங்களுக்கிடையே நடந்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது இரு மாநில தண்ணீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக முதல்- அமைச்சர் மற்றும் கேரள முதல்-மந்திரி இருவரும் கடந்த 26-ந்தேதி சந்திப்பதாக கூறப்பட்டது. 26-ந்தேதி தனக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் இந்த தேதியை மாற்றி வைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இன்று இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாலை 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இரு மாநில முதல்-மந்திரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் பரம்பிகுளம்- ஆழியாறு ஒப்பந்தம் குறித்து பேசப்பட உள்ளது. பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தம் 1970-ல் போடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

எனவே எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் இருவரும் சந்தித்து பேசும்போது இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து ஏற்கனவே கேரள மந்திரி கிருஷ்ணன் குட்டியை தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.

அப்போது இரு மாநிலங்கள் இடையிலான நதி நீர் பங்கீடு மற்றும் தண்ணீர் பிரச்சனை குறித்து சுமூக உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில்தான் அடுத்த கட்டமாக இரு மாநில முதல்-மந்திரிகளும் சந்தித்து பேச உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories