December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய நபர்! ஏடிஎம் கார்டு நம்பரை சொல்லாத கடுப்பு!

cell

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் ரோஸ். இவரது செல்போனுக்கு கடந்த ஞாயிறு அன்று மதியம் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்து பேசியவர் தன்னை ஒரு வங்கி அதிகாரி எனவும் வங்கியின் ஏடிஎம் கார்டு எண்களை தர வேண்டும் எனவும் வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரோஸ் கடந்த ஆண்டு இதே போன்ற திருட்டு கும்பலிடம் ஒரு முறை ஏற்கனவே எ.டி.எம். எண்ணை கூறி எட்டாயிரம் ரூபாயை இழந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் எ.டி.எம். எண்ணை கொடுத்து ஏமாந்து விட கூடாது என்பதில் உஷாரான அந்தப் பெண்மணி ஞாயிற்றுக்கிழமை எந்த வங்கி செயல்படுகிறது எனவும் நீங்கள் உண்மையில் அதிகாரியா ?
என கேட்டு, கோபத்தோடு திட்டியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அழைப்பை துண்டித்த அந்த மர்ம நபர், அடுத்த நிமிடமே இவரது செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே குளச்சல் வட்டாரத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் ஏடிஎம் கார்டு தொடர்பாக வட இந்தியாவிலிருந்து வந்த செல்போன் அழைப்பின் பேரில் ஏடிஎம் கார்டு எண்களை கூறியதால் ஆயிரக்கணக்கான பணங்களை இழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏடிஎம் கார்டு மூலம் அப்பாவி மக்களின் பணங்களை கொள்ளையடிப்பது வாடிக்கையாகி விட்டது இது தொடர்பாக காவல் துறையும் அரசும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories