கொரோனா: பைக்கிலேயே மருத்துவமனைக்கு சென்ற நபர்!

corona way

தகவல் கொடுத்து 12 மணி நேரத்திற்கு பிறகும் ஆம்புலன்ஸ் வராததால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து மருத்துவமனையை அடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி நரசாத் தெருவினை சேர்ந்த 59 வயது முதியவருக்கு கடந்த புதன்கிழமை மதியம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த நபர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து விவரத்தைக் கூறி தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் போன் செய்த சமயம் அங்கு ஆம்புலன்ஸ் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பல முறை 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்களோ ஆம்புலன்ஸ் அனைத்தும் பிற நோயாளிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையே மறுபடி மறுபடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அன்று வீட்டில் நள்ளிரவு வரை ஆம்புலன்ஸூக்காக காத்திருந்த அவர், அதன் பின்னர் வேறு வழியில்லாமல் தனது மகனின் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையை அடைந்துள்ளார்.

இது குறித்து அவினாசிப் பகுதி சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறும் போது ” தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் முதலில் பிற்பகல் 1.15 மணிக்கு வருவதாக இருந்தது. அதன் பின்னர் அது 4 மணி, 7 மணி, 9 மணி என நீண்டு கொண்டே சென்றது. தகவலறிந்தவுடன் நாங்கள் அவரை வீட்டில் தனிமையிலிருக்க அறிவுறுத்தினோம்.

அவர் வெளியே வராதாபடி அவரது வீட்டுகதவுகளையும் மூடினோம். நாங்கள் சொன்ன எல்லாவற்றுக்கும் அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். ஆம்புலன்ஸூக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த வாய்ப்பை நாங்கள் அவருக்கு வழங்கினோம்.

அவரது 21 வயது மகனும் அவரும் இரு சக்கர வாகனத்தில், கிட்டத்தட்ட18 கிலோ மீட்டர் பயணம் செய்து மருத்துவமனைச் சென்றடைந்தனர். அவரது மகன் தான் வாகனத்தை இயக்கினான். இருவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

அவினாசி காவலர்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னர் அவரது வீட்டை நாங்கள் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு வந்தோம்.” என்றார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுகாதார பணியாளாராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறும் போது ” அவர்கள் சென்ற பாதையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories