December 6, 2025, 7:24 AM
23.8 C
Chennai

கொரோனா: பைக்கிலேயே மருத்துவமனைக்கு சென்ற நபர்!

corona way

தகவல் கொடுத்து 12 மணி நேரத்திற்கு பிறகும் ஆம்புலன்ஸ் வராததால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து மருத்துவமனையை அடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி நரசாத் தெருவினை சேர்ந்த 59 வயது முதியவருக்கு கடந்த புதன்கிழமை மதியம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த நபர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து விவரத்தைக் கூறி தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் போன் செய்த சமயம் அங்கு ஆம்புலன்ஸ் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பல முறை 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்களோ ஆம்புலன்ஸ் அனைத்தும் பிற நோயாளிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையே மறுபடி மறுபடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அன்று வீட்டில் நள்ளிரவு வரை ஆம்புலன்ஸூக்காக காத்திருந்த அவர், அதன் பின்னர் வேறு வழியில்லாமல் தனது மகனின் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையை அடைந்துள்ளார்.

இது குறித்து அவினாசிப் பகுதி சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறும் போது ” தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் முதலில் பிற்பகல் 1.15 மணிக்கு வருவதாக இருந்தது. அதன் பின்னர் அது 4 மணி, 7 மணி, 9 மணி என நீண்டு கொண்டே சென்றது. தகவலறிந்தவுடன் நாங்கள் அவரை வீட்டில் தனிமையிலிருக்க அறிவுறுத்தினோம்.

அவர் வெளியே வராதாபடி அவரது வீட்டுகதவுகளையும் மூடினோம். நாங்கள் சொன்ன எல்லாவற்றுக்கும் அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். ஆம்புலன்ஸூக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த வாய்ப்பை நாங்கள் அவருக்கு வழங்கினோம்.

அவரது 21 வயது மகனும் அவரும் இரு சக்கர வாகனத்தில், கிட்டத்தட்ட18 கிலோ மீட்டர் பயணம் செய்து மருத்துவமனைச் சென்றடைந்தனர். அவரது மகன் தான் வாகனத்தை இயக்கினான். இருவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

அவினாசி காவலர்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னர் அவரது வீட்டை நாங்கள் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு வந்தோம்.” என்றார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுகாதார பணியாளாராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறும் போது ” அவர்கள் சென்ற பாதையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories