February 21, 2026, 11:43 PM
26.7 C
Chennai

கொரோனா: பைக்கிலேயே மருத்துவமனைக்கு சென்ற நபர்!

corona way

தகவல் கொடுத்து 12 மணி நேரத்திற்கு பிறகும் ஆம்புலன்ஸ் வராததால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து மருத்துவமனையை அடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி நரசாத் தெருவினை சேர்ந்த 59 வயது முதியவருக்கு கடந்த புதன்கிழமை மதியம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த நபர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து விவரத்தைக் கூறி தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளார். ஆனால் அவர் போன் செய்த சமயம் அங்கு ஆம்புலன்ஸ் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பல முறை 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர்களோ ஆம்புலன்ஸ் அனைத்தும் பிற நோயாளிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையே மறுபடி மறுபடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அன்று வீட்டில் நள்ளிரவு வரை ஆம்புலன்ஸூக்காக காத்திருந்த அவர், அதன் பின்னர் வேறு வழியில்லாமல் தனது மகனின் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையை அடைந்துள்ளார்.

இது குறித்து அவினாசிப் பகுதி சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறும் போது ” தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் முதலில் பிற்பகல் 1.15 மணிக்கு வருவதாக இருந்தது. அதன் பின்னர் அது 4 மணி, 7 மணி, 9 மணி என நீண்டு கொண்டே சென்றது. தகவலறிந்தவுடன் நாங்கள் அவரை வீட்டில் தனிமையிலிருக்க அறிவுறுத்தினோம்.

அவர் வெளியே வராதாபடி அவரது வீட்டுகதவுகளையும் மூடினோம். நாங்கள் சொன்ன எல்லாவற்றுக்கும் அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். ஆம்புலன்ஸூக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த வாய்ப்பை நாங்கள் அவருக்கு வழங்கினோம்.

அவரது 21 வயது மகனும் அவரும் இரு சக்கர வாகனத்தில், கிட்டத்தட்ட18 கிலோ மீட்டர் பயணம் செய்து மருத்துவமனைச் சென்றடைந்தனர். அவரது மகன் தான் வாகனத்தை இயக்கினான். இருவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

அவினாசி காவலர்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னர் அவரது வீட்டை நாங்கள் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு வந்தோம்.” என்றார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுகாதார பணியாளாராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறும் போது ” அவர்கள் சென்ற பாதையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories