டிராவல்ஸ் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கொலை!

aavadi

ஆவடி அடுத்த திருநின்றவூர் செல்வராஜ் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (42). இவர் அதேபகுதியில் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், நேற்று மாலை மகேந்திரன் வீட்டிற்கு அருகே ஒரு ஆட்டோவில் தண்ணீர் கேன் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, 4 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலிடமிருந்து தப்பி மகேந்திரன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தியது.

இதனையடுத்து, அவர் அதே பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்குள் உயிரைக் காப்பாற்ற புகுந்தார். அதைப் பார்த்த அந்த கும்பல், மளிகைக்கடைக்குள்ளும் புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் உறவினர், பொதுமக்கள் மகேந்திரனை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

புகாரின் பேரில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், மகேந்திரன், டிராவல்ஸ் நடத்திக் கொண்டே அந்தப் பகுதியில் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்தப் பகுதியில் இளைஞர்கள், பெண்களை கேலி செய்தாலோ அல்லது கஞ்சா, மது போதையில் கலாட்டா செய்தாலோ மகேந்திரன் தட்டிக் கேட்பது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேந்திரன், அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் மகேந்திரனை ஒரு இளைஞர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் அந்த இளைஞர் கைது செய்தனர். இதனால் மகேந்திரனுக்கும் அந்தப் பகுதி இளைஞருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளது.

எனவே முன் விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் தனிப்படை அமைத்து டிராவல்ஸ் அதிபரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories