டிராவல்ஸ் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கொலை!

aavadi

ஆவடி அடுத்த திருநின்றவூர் செல்வராஜ் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (42). இவர் அதேபகுதியில் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், நேற்று மாலை மகேந்திரன் வீட்டிற்கு அருகே ஒரு ஆட்டோவில் தண்ணீர் கேன் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, 4 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலிடமிருந்து தப்பி மகேந்திரன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தியது.

இதனையடுத்து, அவர் அதே பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்குள் உயிரைக் காப்பாற்ற புகுந்தார். அதைப் பார்த்த அந்த கும்பல், மளிகைக்கடைக்குள்ளும் புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் உறவினர், பொதுமக்கள் மகேந்திரனை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

புகாரின் பேரில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், மகேந்திரன், டிராவல்ஸ் நடத்திக் கொண்டே அந்தப் பகுதியில் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

அந்தப் பகுதியில் இளைஞர்கள், பெண்களை கேலி செய்தாலோ அல்லது கஞ்சா, மது போதையில் கலாட்டா செய்தாலோ மகேந்திரன் தட்டிக் கேட்பது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேந்திரன், அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் மகேந்திரனை ஒரு இளைஞர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் அந்த இளைஞர் கைது செய்தனர். இதனால் மகேந்திரனுக்கும் அந்தப் பகுதி இளைஞருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளது.

எனவே முன் விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் தனிப்படை அமைத்து டிராவல்ஸ் அதிபரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories