வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரது மகள் ஸ்வேதா இவருக்கு வயது நான்கு. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
காய்ச்சல் மர்ம காய்ச்சல் வகையாக இருக்கும் என்ற நிலையில் அவதிப்பட்ட ஸ்வேதாவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.ஆனால் சிறுமி வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் இப்பகுதியில் மக்கள் சோகமும்,மர்மகாய்ச்சல் பற்றிய பீதியும் அடைந்துள்ளனர்.