நீங்கள் GPay அதிகம் பயன் படுத்துவர் எனில்… ஏமாறாமல் இருக்க இந்த எச்சரிக்கை அவசியம்!

Published:

gpay - 2026

நீங்கள் Gpay செயலியை அதிகம் பயன்படுத்துகிறீர்களா… கூகுளின் இந்த எச்சரிக்கை உங்களுக்காகத்தான்! தொடர்ந்து முழுதாகப் படியுங்கள்!

UPI பணப் பரிமாற்றங்களைப் பொறுத்தவரை, கூகுள் பே (Google Pay) நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக கருதப்படுவதால், மக்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. இந்த அளவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் பே செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இவற்றால், அன்றாடம் நடைபெறக்கூடிய மோசடி பரிவர்த்தனைகளை கூகுள் பே அடையாளம் காண்கிறது.

இருப்பினும் இந்த ஏஐ தொழிழ்நுட்பம் எல்லா நேரத்திலும் பயன்படாது. ஒரு சில நிகழ்வுகளில் மோசடிக்காரர்கள் உங்களது வங்கி விவரங்களைப் பெறுவதற்காக ஸ்கிரீன் ஷேரிங் போன்ற சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம். கூகுள் பே பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்யும் போது இது போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள் பொதுவாக, நமக்கு பணிச் சூழலில் தொலைதூர உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்கினாலும் இவற்றை நம் டிவைஸில் நிறுவுவதால், பல நேரத்தில் நாம் ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பயனர்கள் இதனைப் பயன்படுத்தும் போது அதன் மூலமாக வங்கி விவரங்களை மோசடிக்காரர்கள் பெறுகின்றனர்.

“கூகுள் பே ஒருபோதும் பயனாளர்களை தேர்ட் பார்ட்டி செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ, இன்ஸ்டால் செய்யவோ சொல்லாது. ஒருவேளை நீங்கள் கூகுள் பே பயன்படுத்துவதற்கு முன்பு இது போன்ற செயலிகளை ஏற்கனவே டவுன்லோட் செய்திருந்தால் அவற்றை செல்போனில் இருந்து அழிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,” என்கிறது கூகுள்!

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

“யாரேனும் உங்களிடம் கூகுள் பே ரெப்ரசன்டேட்டிவ் போல பேசி இந்த அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய சொல்லி, நீங்கள் அதனை டவுன்லோட் செய்திருந்தால் உடனடியாக அவற்றை அழித்து விடுங்கள். இது குறித்து நீங்கள் கூகுள் பே-யில் புகாரையும் பதிவு செய்யலாம்,” என்கிறது கூகுள்!

ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள் மற்றவர்களின் ஸ்கிரீனில் என்ன நடக்கிறது என்பதைக் காணவும், அந்த சாதனத்தின் கட்டுப்பாட்டை எடுக்கவும் பயன்படுத்தப்படுவதால், உங்களது அனுமதி இல்லாமல் இது போன்ற அப்ளிகேஷன்களை மோசடிக்காரர்கள் இன்ஸ்டால் செய்யும்படி ஏமாற்றலாம்.

நீங்கள் UPI பின் நம்பரை என்டர் செய்யும் பொழுது பின் நம்பர் என்ன என்பது மோசடிக்காரர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிறகு உங்கள் வங்கி விவரங்கள் மற்றும் UPI பின் தெரிந்து கொண்ட அந்த நபர்கள் நிச்சயமாக உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எடுத்து விடுவார்கள். எனவே முடிந்தவரை இது போன்ற ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள்.

ஒருவேளை உங்களது வேலைக்கு அது அவசியமாக கருதப்பட்டால் நீங்கள் பணப் பரிமாற்றங்களைச் செய்யும் பொழுது அந்த அப்ளிகேஷன்களை திறக்க வேண்டாம். ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்களை மூடிய பிறகு கூகுள் பே செயலியை திறந்து பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

Related articles

Recent articles

spot_img