‘பரோட்டா சூரி’ காட்சின்னு நெனப்பு! 50ன்னு பந்தயம்; ஆனா 42 முட்டைலயே… பரிதாபம்!

parotta soori comedy - 2026

50 முட்டைகள் தின்பதாக பந்தயம். ஆனால் 42ஆவது முட்டையிலேயே முழி பிதுங்கியது. கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு, பாவம்… போய்ச் சேர்ந்தார் இளைஞர் ஒருவர்.

உத்தரப்பிரதேசம் ஜோன்பூரில் விளையாட்டாக கட்டிய பந்தயம் ஒரு மனிதரின் உயிருக்கே உலை வைத்தது.

50 முட்டைகள் தின்றால் 2000 ரூபாய் தருவதாக கூறிய பந்தயத்திற்கு அவர் உடன் பட்டார். ஆனால் 42வது முட்டை தின்னும்போதே மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சிகிச்சையில் இருந்த போதே…பாவம் மனிதர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஜோன்பூரில் உள்ள பீபீகஞ்ச் பஜாரில் நடந்துள்ளது.

சுபாஷ் டிராக்டர் ஓட்டுபவர். சுபாஷ் தன் நண்பர்களோடு முட்டை சாப்பிடுவது பற்றி பந்தயம் கட்டினார். யார் எத்தனை முட்டை தின்ன முடியும் என்பது குறித்து சர்ச்சை நடந்தது. ஐம்பது முட்டை தின்று ஒரு பாட்டில் மது அருந்த வேண்டும் என்பது பந்தயம். வென்றவருக்கு 2000 ரூபாய் அன்பளிப்பு என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!
parotta soori - 2026

சுபாஷ் அதனை ஏற்று முட்டைகளை தின்ன ஆரம்பித்தார். எந்த பிரச்சினையுமின்றி நாற்பத்தொரு முட்டைகளை விழுங்கி விட்டார். 42வது முட்டையை தின்னும்போது நினைவிழந்து கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் உடல்நிலை சீரியஸாகவே மருத்துவர்கள் அவரை லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர். அங்கு சென்று சிகிச்சை பெறுகையில் சுபாஷ் மரணம் அடைந்தார்.

சுபாஷுக்கு அண்மையில்தான் இரண்டாம் திருமணம் நடந்தது. முதல் மனைவிக்கு நான்கும் பெண் குழந்தைகளாகவே பிறக்கவே ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்தச் சம்பவம் உள்ளூர்வாசிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories