‘பரோட்டா சூரி’ காட்சின்னு நெனப்பு! 50ன்னு பந்தயம்; ஆனா 42 முட்டைலயே… பரிதாபம்!

Published:

parotta soori comedy - 2026

50 முட்டைகள் தின்பதாக பந்தயம். ஆனால் 42ஆவது முட்டையிலேயே முழி பிதுங்கியது. கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு, பாவம்… போய்ச் சேர்ந்தார் இளைஞர் ஒருவர்.

உத்தரப்பிரதேசம் ஜோன்பூரில் விளையாட்டாக கட்டிய பந்தயம் ஒரு மனிதரின் உயிருக்கே உலை வைத்தது.

50 முட்டைகள் தின்றால் 2000 ரூபாய் தருவதாக கூறிய பந்தயத்திற்கு அவர் உடன் பட்டார். ஆனால் 42வது முட்டை தின்னும்போதே மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சிகிச்சையில் இருந்த போதே…பாவம் மனிதர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஜோன்பூரில் உள்ள பீபீகஞ்ச் பஜாரில் நடந்துள்ளது.

சுபாஷ் டிராக்டர் ஓட்டுபவர். சுபாஷ் தன் நண்பர்களோடு முட்டை சாப்பிடுவது பற்றி பந்தயம் கட்டினார். யார் எத்தனை முட்டை தின்ன முடியும் என்பது குறித்து சர்ச்சை நடந்தது. ஐம்பது முட்டை தின்று ஒரு பாட்டில் மது அருந்த வேண்டும் என்பது பந்தயம். வென்றவருக்கு 2000 ரூபாய் அன்பளிப்பு என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
parotta soori - 2026

சுபாஷ் அதனை ஏற்று முட்டைகளை தின்ன ஆரம்பித்தார். எந்த பிரச்சினையுமின்றி நாற்பத்தொரு முட்டைகளை விழுங்கி விட்டார். 42வது முட்டையை தின்னும்போது நினைவிழந்து கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் உடல்நிலை சீரியஸாகவே மருத்துவர்கள் அவரை லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர். அங்கு சென்று சிகிச்சை பெறுகையில் சுபாஷ் மரணம் அடைந்தார்.

சுபாஷுக்கு அண்மையில்தான் இரண்டாம் திருமணம் நடந்தது. முதல் மனைவிக்கு நான்கும் பெண் குழந்தைகளாகவே பிறக்கவே ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்தச் சம்பவம் உள்ளூர்வாசிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img