கண்ணனும் கரோனாவும்!

krishna kuchela - 2026

கண்ணனும் கரோனாவும்:
தொட்டுப் பேசாதே
எச்சில் பண்ணாதே
கண்ட இடத்தில் துப்பாதே
மேல படாதே
வாசலோட பேசி அனுப்பு
வெளில சாப்பிடாதே
கண்டதையும் தின்னாதே

இவை எல்லாம் அந்தணர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே கூறும் அறிவுரைகள்! ஆனால் இந்த அறிவுரைகள் எல்லாம் இதே சமூகத்தால் விமர்சிக்கப் பட்டு, இவை சமூக சமத்துவத்தை குலைப்பதாக பிரசாரம் செய்தார்கள்.

இன்று காரோனாவால் இந்த அறிவுரைகளை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. உடல் ரீதியான சமத்துவம் பேசிக் கொண்டிருந்த மேலை நாடுகள் இன்று ஏமாற்றத்தால் துவண்டு போயுள்ளன.

வித்யா வினய ஸம்பன்னே ப்ராம்மணே கவி ஹஸ்தினி, சுனிஷ்ச்சைவ ஸ்வபாகேச பண்டிதாஹா ஸம தர்சினஹா” என்றான் கண்ணன். கற்றறிந்த அந்தணன், பசு, யானை, நாய் மற்றும் அந்த நாயையும் உண்பவன் என்றிருக்கும் இவர்கள் அனைத்து பேரையும் பண்டிதர்கள் (ஞானிகள்) சமமாகப் பார்ப்பார்கள் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

ஆக பண்டிதர்கள் உடலைத் தாண்டி ஆத்ம சமத்துவம் பாராட்டக் கூடியவர்கள். அனைத்து ஆத்மாக்களும் இறைவனை தன்னகத்தே கொண்டவை என்று பார்ப்பவர்கள். இதனால் உடலைத் தாண்டிய சமத்துவம் பேசினான் கீதையில் கண்ணன்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

கண்ணன் மற்றொரு விஷயத்தையும் கீதையில் சொன்னான்: “சாதுர்வர்ண்யாம் மாயா ஸ்ருஷ்டம்” என்றான். அதாவது “நான்கு வர்ணங்களும் என் படைப்புகள்” என்றான். இந்த வர்ணாஸ்ரம தர்மம் என்பது உடல் ரீதியான ஒன்று. அந்த சுலோகத்தில் உள்ளத்து ரீதியான சமத்துவத்தினைக் காண்பது குறித்துப் பேசிய கண்ணன், இந்த சுலோகத்தில் உடல் ரீதியான பாகுபாட்டை விவரிக்கிறான்.

hand wish - 2026

ஓர் இனத்துக்குள்ளே பாகுபாடுகள் பல இருக்கும். யானை எனின், இந்திய யானை, ஆப்ரிகா யானை போன்று பல வகைகள் உண்டு. இப்படி மனித இனத்துக்கான உடல் ரீதியான பாகுபாடுதான் வர்ணாச்ரமத்தில் கூறப் படுவது. இதற்கும் தீண்டாமைக்கும் தொடர்பு இல்லை. இது உலக இயற்கை.

நமது சுய லாபத்துக்காகவும், சிறிது கால சந்தோஷத்துக்காகவும் நாம் இந்த இயற்கையை மீறி பல கலப்புக்களிலும், பல செயல்களிலும் ஈடுபடுகிறோம். ஆங்கிலத்தில் “Cross breed” என்பார்கள். இது மனிதன் துவங்கி தாவரம் வரை நடக்கிறது. ஒட்டு மாங்காய் என்பதை நாம் விரும்பி உண்போம். இது சுவையாய் இருக்கலாம் ஆயினும் உடலுக்கு நன்மை பயக்குமா என்றால் கேள்விக்குறி தான்.

ALSO READ:  திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

இதுபோல் பல உள்ளன. சுகத்துக்காகவும் சுவைக்காகவும் நாம் பல இயற்கையை மீறும் செயலில் ஈடுபட்டு வருகிறோம். இதை உணர்ந்த சிலரின் முயற்சியே organic உணவுகள். மர செக்கு எண்ணெய், பூச்சி மருந்தில்லா காய்கறி என்று அந்த நாட்களில் இருந்த பலவற்றை நாம் மீளவும் கொண்டு வருகிறோம்.

Inorganic என்று கூறப்படும் hybrid வகைகள் கலப்பு மற்றும் இயற்கைக்கு எதிரான ரசாயன சேர்க்கையால் பெற்ற பொருட்கள். இவை சுவையும் சுகமும் தரலாம்! ஆனால் இவை நன்மை பயக்காது.

அதுபோல் இயற்கைக்கு எதிரான மனிதக் கலப்புக்கள் சுகமளிக்கலாம் ஆனால் நன்மை பயக்காது. இனிமை அனைத்தும் நன்மை தராது! நன்மை அனைத்தும் இனிமையாக இருக்காது. ஆயினும் நன்மை பயப்பதே நிலையானது. இனிமை என்றும் நிலைக்காது.

கண்ணன் சொன்ன இயற்கையை மீறியதால் வந்த விளைவே கரோனா. கண்ணனே கரோனாவை ஒழிக்க வேண்டும்!

  • ஸ்ரீவல்லபன் தேவராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories