சுபாஷிதம்! வசுதைவ குடும்பகம்!

Published:

Screenshot 2020 10 02 08 34 30 875 com.android.chrome 1 - 2026

சுபாஷிதம்! வசுதைவ குடும்பகம்!

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம் – வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

  1. வசுதைவ குடும்பகம்!

ஸ்லோகம்:
அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதசாம் !
உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம் !!

பொருள்:
இவன் என்னுடையவன், அவன் பிறருடையவன் என்ற சிந்தனை சுயநலமுடையவனின் மன ஓட்டம். உதார குணம் உள்ளவனுக்கு உலகமெல்லாம் ஒரே குடும்பமாகத் தோற்றமளிக்கும்.

விளக்கம்:
குறுகிய கண்ணோட்டம் தீமை பயக்கும். சனாதன தர்மம் மட்டுமே அனைத்து ஜீவன்களின் நலனையும் கோருகிறது. ‘சர்வே பவந்து சுகின:’ என்று விரும்புகிறது. வழிபாட்டு முறைகளையும், சமூக, மொழி வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல் அனைவரையும் அரவணைத்துக்
கொள்கிறது.

தன்-பிற வேற்றுமைகள் இன்றி உலகனைத்தும் ஒரே குடும்பமாக அமைதியோடும் நலமோடும் விளங்க வேண்டும் என்று இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது.

உலகில் குறுகிய கண்ணோட்டம் பலவிதங்களில் வெளிப்படுகிறது.
குலம், மொழி, இடம் காரணமாகவோ, வழிபாடு, ஆன்மீக சாதனை போன்ற பெருமைகள் காரணமாகவோ சிலர் தம்மைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்பாடு செய்து கொள்வார்கள். அந்த வட்டத்திற்குள் வேறு யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். அதோடு பிறரை வெறுப்போடு நோக்குவார்கள். இந்த குறுகிய கண்ணோட்டத்தால்தான் உலகில் போராட்டங்கள் நடக்கின்றன.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

‘நீ ஒரு சிறிய வட்டம் வரைந்து என்னை வெளியே தள்ளி விட்டாய். அதனால் நான் ஒரு பெரிய வட்டம் வரைந்து உன்னையும் என்னோடு சேர்த்துக் கொள்வேன்’ என்றான் ஒரு கவிஞன்.
சனாதன தர்மத்திலும் பாரத கலாச்சாரத்திலும் உள்ள தனித்தன்மை இது.

‘என் தெய்வம் மட்டுமே உண்மை!’ என்ற எண்ணமே உலகின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது. ‘தெய்வம் ஒன்றே! அதுவே உண்மை!’ என்று கூறினால் அனைத்து வழிபாட்டு முறைகளும் அந்த ஒரே பரமாத்மாவின் அருகாமைக்கு நம்மைக் கொண்டு சேர்க்கும். இந்த கோட்பாடே அமைதிக்கு அடித்தளம். இது பாரத தேசத்தின் சிந்தனை.

இந்த விசாலமான எண்ணமே ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து!’, யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்ற வாக்கியங்களின் மூலம் வெளிப்படுகிறது. பிரபஞ்ச அமைதிக்கு இதுவே மூலாதாரம்!

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img