‘செங்கோட்டை மாப்பிள்ளை டி.ஆர்.மகாலிங்கம்’: நினைவலைகள்!

tr mahalingam - 2026

எனது நினைவலைகளில் இருந்து…

– By KH கிருஷ்ணன், செங்கோட்டை –

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா இந்த வருடம் ஜூன் 16ல் கொண்டாடப்பட்டதாக அறிந்தேன். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையைச் சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். இவர் ஜூன் 16ஆம் தேதி 1924-ல் பிறந்து 1978ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இயல், இசை, நாடகத் துறையில் கலைமாமணி விருது பெற்றவர். பல்வேறு படங்களில் பாடல்களைப் பாடி, தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக என பல்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தியவர்.

தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என 1940 – 1950களில் மிகப் பிரபலமாக இருந்தார், டி.ஆர்.மகாலிங்கம். உச்ச த்வனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப் பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன. 

39 படங்களில் நடத்த இவர் தனது 5 வயது முதல் நாடக மேடை ஏறி தனது பாடல் மூலம் பல்வேறு புகழடைந்தார். இவரது மேடை நாடகப் பாடலில் மெய்சிலிர்த்த ஏவி மெய்யப்பச் செட்டியார் டி.ஆர்.மகாலிங்கத்திற்கு 13வது வயதில் பட வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு, திரைத்துறையில், பல்வேறு சாதனைகள் புரிந்தார். இதுவே டி.ஆர்.மகாலிங்கத்தின் பின்னணி!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

2017 ஜூன் மாதத்தில் சிருங்கேரி மஹா சன்னிதானம் மற்றும் சன்னிதானம் செங்கோட்டைக்கு விஜயம் செய்து, அம்மன் சந்நிதி தெருவில் அப்போது புதிதாக அமைக்கப்பட்ட சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னின்று சிறப்புற நடத்தி வைத்தார்கள்.

அதற்கு முன் சோழவந்தான் தென்கரை கிராமத்தில் இரண்டு ஆச்சார்யர்களும் முகாமிட்டு இருந்தார்கள். தென்கரையில் இருந்து ஆச்சார்யர்களை செங்கோட்டைக்கு அழைத்து வர ஒரு குழு தென்கரை சென்றது. அவர்கள் திரும்பி வந்தபோது சோழவந்தானில் மறைந்த பழம்பெரும் நடிகர் டி.ஆர். மஹாலிங்கம் வீட்டைப் பார்த்ததாகவும், அவர் தொடர்புடைய குடும்பத்தினரைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறினார்கள்.

சொல்லப் போனால், டி.ஆர். மஹாலிங்கம் செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெரு மாப்பிள்ளை. அவரது மச்சினர் திருவாளர் ஆண்டியின் வீடு பாரத் பெட்ரோலியம் ஹெச்.மஹாதேவன் வீட்டிற்கு எதிர் வீடுதான். நான் செங்கோட்டையில் ஆறாம் வகுப்பு படித்த காலத்தில் குற்றால சீசன் நேரத்தில் டி.ஆர்.மஹாலிங்கம் தனது குடும்பத்தோடு பெரிய காரில் அம்மன் சந்நிதித் தெருவில் இருந்த அவரது மாமனார் வீட்டுக்கு வருவார். அவரது பிள்ளை சுகுமார் ரொம்ப ஸ்டைல் பண்ணிக் கொள்வார். நாங்களும் அவரிடம் போய் ஏதாவது பேசிக் கொண்டிருப்போம்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

ஒரு முறை செங்கோட்டை மெயின் ரோட்டில் தற்போதும் இருக்கும் – ஸ்ரீ மூலம் ரீடிங் கிளப் – வாசகசாலையில் எனது தந்தை டி.ஆர்.மகாலிங்கத்திற்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்.

டி.ஆர்.மஹாலிங்கம் புதிய வெள்ளை ஜிப்பா, நல்ல வெளுத்த வேட்டி அணிந்து ஜம் என்று விழாவிற்கு வந்தார். விழா முடிந்ததும் அங்கு வந்திருந்த செங்கோட்டை மஹா ஜனங்கள், அவரை அவர் பாடிய பழைய பாடல் ஒன்றை பாடச் சொன்னார்கள்.

அவரும் தமது கந்தர்வக் குரலில் – பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா – என்ற பாடலைப் பாடினார். எனக்கு தலை கால் புரியவில்லை.
அந்தப் பாடலை எப்போது யுடியூப்பில் கேட்டாலும், அவரது அந்நாளைய அந்த ஸ்டைல்தான் நினைவுக்கு வரும். இந்தப் பாடலில் சாரங்கபாணியின் அபிநயம் ஜோராக இருக்கும். அதை இன்றளவும் பார்த்து ரசிக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories