மகிழ்ச்சியை பகிருங்க… வதந்திகளை அல்ல..! வாட்ஸ்அப்பின் முதல் டிவி., விளம்பரம்!

whatsapp tv commercial - 2026

புதுதில்லி: சமூகத் தளமான, ‘வாட்ஸ்அப்’பில் பரப்பப் படும் வதந்திகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில் ‘டிவி’க்களில், விளம்பரப் படங்களை ஒளிபரப்பி விழிப்பு உணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப். அதன்படி முதல் விளம்பரப் படம் ஒளிபரப்பானது. உங்கள் மகிழ்ச்சியைப் பகிருங்கள், வதந்திகளை அல்ல என்னும் தலைப்புடன் விளம்பரப் படம் ஒளிப்பரப்பப் படுகிறது.

சமூக வலைதளமான, ‘வாட்ஸ்அப்’பில் பரவிய வதந்திகளால் அண்மைக் காலமாக 25க்கும் மேற்பட்டோர் கும்பல் தாக்குல் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில், வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ‘நோட்டீஸ்’ அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ‘வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளைக் கண்காணிக்க அந்த நிறுவனம் சார்பில், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் ‘டிவி’ விளம்பரங்கள் மூலம் மற்றும் விளம்பரப் படங்கள் மூலம் ‘வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது சர்வதேச அளவில் குறிப்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி!

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இந்தியாவில்தான் முதன் முதலில் இந்த நிறுவனத்தால் ஏற்படுத்தப் படும் விளம்பரப் படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. 60 வினாடிகள் ஓடும் மூன்று விளம்பரப் படங்களை, வாட்ஸ்அப் நிறுவனம் தயாரித்துள்ளது. அவற்றில் முதல் விளம்பரப் படம் திங்கள் கிழமை டிவி.,க்களில் ஒளிபரப்பானது.

இதற்கு முன்னர் ரேடியோ விளம்பரங்களை உருவாக்கி, கடந்த ஆக.29 முதல் ஆலிண்டியா ரேடியோவின் 46 வானொலி நிலையங்களில் ஒலிபரப்பானது! அஸாம், திரிபுரா, மேற்கு வங்கம், குஜராத், கரநாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிஸா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விளம்பரங்கள் ஒலிபரப்பாயின.

இந்நிலையில் டிவி மூலமான விளம்பரங்களாக, சிர்ஷா குஹா தகுர்தா என்ற படத்தயாரிப்பாளர் மூலமாக 60 நொடிகள் ஓடும் விளம்பரங்களை தயாரித்துள்ளது வாட்ஸ்அப். இவை, டிவி., பேஸ்புக், யுடியூப் உள்ளிட்டவற்றில் ஒன்பது மொழிகளில் ஒளிபரப்பாகின்றன.

விளம்பரம் – 1: 

விளம்பரம் – 2:

விளம்பரம் – 3:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories