மகிழ்ச்சியை பகிருங்க… வதந்திகளை அல்ல..! வாட்ஸ்அப்பின் முதல் டிவி., விளம்பரம்!

whatsapp tv commercial - 2026

புதுதில்லி: சமூகத் தளமான, ‘வாட்ஸ்அப்’பில் பரப்பப் படும் வதந்திகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில் ‘டிவி’க்களில், விளம்பரப் படங்களை ஒளிபரப்பி விழிப்பு உணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது வாட்ஸ்அப். அதன்படி முதல் விளம்பரப் படம் ஒளிபரப்பானது. உங்கள் மகிழ்ச்சியைப் பகிருங்கள், வதந்திகளை அல்ல என்னும் தலைப்புடன் விளம்பரப் படம் ஒளிப்பரப்பப் படுகிறது.

சமூக வலைதளமான, ‘வாட்ஸ்அப்’பில் பரவிய வதந்திகளால் அண்மைக் காலமாக 25க்கும் மேற்பட்டோர் கும்பல் தாக்குல் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில், வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ‘நோட்டீஸ்’ அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ‘வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளைக் கண்காணிக்க அந்த நிறுவனம் சார்பில், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் ‘டிவி’ விளம்பரங்கள் மூலம் மற்றும் விளம்பரப் படங்கள் மூலம் ‘வாட்ஸ்அப்’பில் பரவும் வதந்திகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது சர்வதேச அளவில் குறிப்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி!

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இந்தியாவில்தான் முதன் முதலில் இந்த நிறுவனத்தால் ஏற்படுத்தப் படும் விளம்பரப் படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. 60 வினாடிகள் ஓடும் மூன்று விளம்பரப் படங்களை, வாட்ஸ்அப் நிறுவனம் தயாரித்துள்ளது. அவற்றில் முதல் விளம்பரப் படம் திங்கள் கிழமை டிவி.,க்களில் ஒளிபரப்பானது.

இதற்கு முன்னர் ரேடியோ விளம்பரங்களை உருவாக்கி, கடந்த ஆக.29 முதல் ஆலிண்டியா ரேடியோவின் 46 வானொலி நிலையங்களில் ஒலிபரப்பானது! அஸாம், திரிபுரா, மேற்கு வங்கம், குஜராத், கரநாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிஸா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விளம்பரங்கள் ஒலிபரப்பாயின.

இந்நிலையில் டிவி மூலமான விளம்பரங்களாக, சிர்ஷா குஹா தகுர்தா என்ற படத்தயாரிப்பாளர் மூலமாக 60 நொடிகள் ஓடும் விளம்பரங்களை தயாரித்துள்ளது வாட்ஸ்அப். இவை, டிவி., பேஸ்புக், யுடியூப் உள்ளிட்டவற்றில் ஒன்பது மொழிகளில் ஒளிபரப்பாகின்றன.

விளம்பரம் – 1: 

விளம்பரம் – 2:

விளம்பரம் – 3:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories