கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…!

 

karudan - 2026மாறிவிட்ட இந்த உலகில் பொய்க்கென ஒரு தனிமதிப்பு உருவாகிவிட்டது. நமக்கு வேண்டிய காரியங்களை சாதித்து கொள்ள பொய் கூறினால்தான் முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது இல்லை உருவாக்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம். உண்மைக்கென இருக்கும் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது.

நம்மை சுற்றியிருப்பவர்களில் யார் பொய் கூறுகிறார்கள், யார் உண்மையை கூறுகிறார்கள் என்பதை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அதனை எப்படி எளிதில் கண்டறிவது என்பது பற்றி கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் பொய் பேசுவதை கண்டறிய கருட புராணம் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…! கருடருக்கும், விஷ்ணுவுக்குமான உரையாடல்
கருட புராணம் என்பது விஷ்ணுவுக்கும், கருடருக்கும் நடந்த உரையாடலை பற்றி கூறுவதாகும். கருடர் என்பது ஒருவகை பறவையாகும். இது விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாகும். இது இந்து மதத்தின் குறிப்பிட்ட கோட்பாடுகளை பற்றி கூறுகிறது. இதில் மரணம், மறுபிறப்பு, மரண சடங்குகள் போன்றவற்றை பற்றி விரிவாக கூறுகிறது.

இந்து மதத்தின் 18 மஹாபுராணங்களில்இதுவும் ஒன்றாகும். விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இது வைணவ இலக்கியத்தின் கீழ் வருகிறது. இது முழுக்க முழுக்க விஷ்ணுவை பற்றிய புராணமாகும்.

பொய் கலை

பொய் கூறுவது என்பது ஒரு கலையாகும். நன்றாக பொய் சில தெரிந்தவர்கள் எப்பொழுதும் அவர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளிடம் இருந்து விலகி இருக்கத்தான் முயலுவார்கள். பொய் கூறுபவர்கள் அனைத்தையும் கச்சிதமாக செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் கண்டறிவது எப்படி? அவர்கள் மனதில் என்ன இருக்கிறது? அவர்கள் எதை மறைக்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது.

பொய் கூறுபவர்களின் உடல் மொழி

மக்கள் அரிதாகவே மற்றவர்கள் பொய் கூறுவதை கண்டுபிடிக்கிறார்கள். கருட புராணம் பொய் கூறுவது யார், உண்மை சொல்பவர்கள் யார் என்பதை கண்டறியும் ரகசியத்தை கொண்டுள்ளது. அவர்கள் பொய் கூறுவதை அவர்களின் உடல் மொழியே காட்டிக்கொடுத்துவிடும்.

உயரம் மற்றும் உடலமைப்பு

முக்கியமான விஷயத்தை பற்றி பேசும்போது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களின் உடல்மொழியை கவனித்தால் அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கண்டறிந்து விடலாம்.

ஒருவேளை அவர்கள் அசௌகரியமாக உணர்ந்தாலோ அல்லது உங்களிடம் பொய் கூறினாலோ அவர்களின் தோள்பட்டை கீழ்நோக்கி இருக்கும்.

எந்த தலைப்பாக இருந்தாலும் அவர்கள் பொய் கூறினால் அது அவர்கள் உடலியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உடலின் சைகைகள்

சிலருக்கு மற்றவர்களிடம் பேசும் போது ஒரு கை அல்லது இரண்டு கையையும் தூக்கி பேசும் பழக்கம் இருக்கும்.

இது அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். சிலர் அவர்களின் கால்களின் நிலையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இது கட்டளையிடும் தோரணையின் அடையாளமாகும். ஒருவர் பொய் கூறினாலோ அல்லது விவாதம் பிடிக்காவிட்டாலோ அவர்கள் தொடர்ந்து தங்களின் சைகைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

பொய் கூறுபவர்கள் எப்பொழுதும் அவசரமாக நடந்து கொள்வார்கள்.

தேவையற்ற பதட்டம்

ஒருவர் பொய் கூறுவது உங்களுக்கு தெரிந்தால் அவர்களின் உடல் இயக்கங்களை நன்கு கவனித்து பாருங்கள். அவை தொடர்ந்து பதட்டத்தில் இயங்கி கொண்டே இருக்கும்.

ஒருவர் மிகவும் சாதாரணமாக இருந்தாலோ அல்லது அமைதியற்றவர்களாக இருந்தாலோ அவர்கள் உங்களிடம் எதையோ மறைக்கிறார்கள் அல்லது பொய் கூறுகிறார்கள் என்று அர்த்தம்.

கண் அசைவுகள்

அவர்கள் உங்களிடம் பேசும் விதத்தை கவனியுங்கள், அவர்கள் உங்களின் கண்களை பார்த்து பேசாமலோ அல்லது கண்களை மூடிக்கொண்டே இருந்தாலோ அவர்கள் உங்களிடம் உண்மையை மறைக்கிறார்கள் அல்லது நீங்கள் பேசுவதில் உங்களுக்கு விருப்பமில்லை என்று அர்த்தம். இதற்கு அர்த்தம்.

அவர்கள் உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறார்களே தவிர எதையும் பதிவு செய்துகொள்ள விரும்பவில்லை என்று அர்த்தம்.

சோர்வு

நீங்கள் ஒருவரிடம் பேசும்போது அவர்கள் சோர்வாக காட்சியளித்தால் அவர்கள் நிச்சயம் உங்களின் பேச்சில் ஆர்வம் காட்டவில்லை என்று அர்த்தம். ஒருவேளை அவர்கள் ஆர்வமாக இருப்பது போல நடித்தாலும் அது பொய்யானதுதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories