ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை துவக்கம்..

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை புதன்கிழமை துவங்குகிறது.

ஏழைகளின் ஊட்டி   ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெறவில்லை.

இந்த ஆண்டு ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக 5 லட்சம் மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. தற்போது 15 ஆயிரம் தொட்டிகளில் டேலியா, மேரிகோல்டு, அஸ்டர், சால்வியா, அந்தூரியம், லில்லி உள்பட பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. நாளை தொடங்குகிறது இந்த ஆண்டுக்கான கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி அண்ணா பூங்காவில் நாளை புதன்கிழமை தொடங்குகிறது. 8 நாட்கள் விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி அண்ணா பூங்காவில் நாளை காலை 10 மணிக்கு கோடை விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.  தொடர்ந்து கலையரங்கத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

முன்னதாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாம்பழங்கள் சேலம் என்றால் மாம்பழம் என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. அந்த சிறப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏற்காட்டில் நடைபெறும் கோடை விழாவில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 ரகங்களில் மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. மலர் கண்காட்சியில் சுமார் 5 லட்சம் மலர்களை கொண்டு வள்ளுவர் கோட்டம், மேட்டூர் அணை, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பு வகையில் மாட்டு வண்டியில் காய்கறி போன்ற மலர் அலங்காரங்கள், பட்டாம்பூச்சி வடிவில் செல்பி பாயிண்ட், குழந்தைகளை கவரும் வகையில் ஜின்ஜாங் உருவம், மகளிருக்கான இலவச பஸ் வசதி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான வடிவம் ஆகியவை இடம்பெற உள்ளது. மேலும் 46 வகையான பழங்களால் ஆன உணவு பொருட்கள் விற்கப்பட உள்ளன.  கோடை விழாவையொட்டி அண்ணா பூங்கா மற்றும் ஏரி பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் செலவில் அண்ணா பூங்காவில் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு செடிகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. பூங்காவுக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்ல தனிப்பாதையும் அமைக்கப்படுகிறது. மேலும் மலர் அலங்காரம் செய்வதற்காக ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சுமார் 3 லட்சம் ரோஜா மலர்கள் இன்று ஏற்காட்டுக்கு கொண்டு வரப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

images 45 2 - 2026
images 44 1 - 2026
images 46 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories