December 5, 2025, 8:59 PM
26.6 C
Chennai
Homeஉள்ளூர் செய்திகள்மதுரைவிக்கிரமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

விக்கிரமங்கலத்தில் முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா

-

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா தொடங்கிய நாள் முதல் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் மேளதாளத்துடன், வாண வேடிக்கையுடன் பூசாரி வீட்டிலிருந்து சாமி பெட்டி எடுத்து வந்தனர். பின் சக்திகிரகம் எடுத்து. பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை அடைந்தனர்.

இங்கு சிறப்பு பூஜை நடந்தது. இப்பகுதி கிராம மக்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இரண்டாம் நாள் காலை கிராம மக்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். காலை பக்தர்கள் பால்குடம், மதியம் அக்னிச் சட்டி எடுத்து வந்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாள் சக்தி கிரகம், முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று மதியம் சாமி பெட்டி, பூசாரி வீட்டுக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -