WC 2023: ஆப்கன் அணிக்கு எதிராக இந்தியா !

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஏழாம் நாள் – இந்தியா vs ஆப்கானிஸ்தான் – 11.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆப்கானிஸ்தான் அணியை (272/8, ஹஷ்மத்துல்லா 80, ஒமராசி 62, பும்ரா 4/39, பாண்ட்யா 2/43) இந்திய அணி (35 ஓவரில் 2 விக்கட் இழப்பிற்கு 273 ரன், ரோஹித் ஷர்மா 131, இஷான் கிஷன் 47, கோலி 55*, ஷ்ரேயாஸ் ஐயர் 25*, ரஷீத் கான் 2/57) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.  பவர்ப்ளேயான முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 48 ரன் எடுத்தது. ஏழாவது ஓவரில் இப்ராஹிம், 13ஆவது ஓவரில் ரஹமத்துல்லா, 14ஆவது ஓவரில் ரஹமத் ஷா ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஹஷ்மத்துலாவும் ஓமராசியும் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் பும்ரா, குல்தீப், ஜதேஜா ஆகியோரின் பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 272/8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. குல்தீப் 39, 41 மற்றும் 43ஆவது ஓவர்களை வீசினார். அவற்றில் ஒரு விக்கட் எடுத்து மொத்தம் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

          அதன் பிறகு ஆடவந்த இந்திய அணி தனது வெற்றியை முதல் பத்து ஓவர்களில் அறிவித்துவிட்டது. அந்த 10 ஓவர்களில் இந்திய அணி 94/0; அதில் ரோஹித் ஷர்மா 74 ரன். ரோஹித் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் 131 ரன் எடுத்தார். முதலில் ஆட்டமிழந்தது இஷான் கிஷன். அவர் 47 பந்துகளில் 47 ரன் எடுத்தார். பின்னர் ஆடவந்த கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் தங்கள் பங்குக்கு ஆடி 35 ஓவரில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை ஆட்டங்களில் ஏழு சதங்கள் அடித்த முதல் வீரரானார். இன்றைய ஆட்டத்தில் அவர் நாலாவது சிக்சர் அடித்தபோது, ஒருநாள் ஆட்டங்களில் 554 சிக்சர் அடித்து, அதிக சிக்சர் அடித்த வீரரானார்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

          இந்த வெற்றியோடு, நாலு புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில், 1.5 என்ற ரன்ரேட்டுடன் இரண்டாமிடம் வகிக்கிறது.  நாளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே லக்னோவில் ஆட்டம் நடைபெறும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories