December 5, 2025, 7:05 PM
26.7 C
Chennai

WC 2023: ஆப்கன் அணிக்கு எதிராக இந்தியா !

world cup cricket 2023 - 2025
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஏழாம் நாள் – இந்தியா vs ஆப்கானிஸ்தான் – 11.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆப்கானிஸ்தான் அணியை (272/8, ஹஷ்மத்துல்லா 80, ஒமராசி 62, பும்ரா 4/39, பாண்ட்யா 2/43) இந்திய அணி (35 ஓவரில் 2 விக்கட் இழப்பிற்கு 273 ரன், ரோஹித் ஷர்மா 131, இஷான் கிஷன் 47, கோலி 55*, ஷ்ரேயாஸ் ஐயர் 25*, ரஷீத் கான் 2/57) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.  பவர்ப்ளேயான முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 48 ரன் எடுத்தது. ஏழாவது ஓவரில் இப்ராஹிம், 13ஆவது ஓவரில் ரஹமத்துல்லா, 14ஆவது ஓவரில் ரஹமத் ஷா ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஹஷ்மத்துலாவும் ஓமராசியும் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் பும்ரா, குல்தீப், ஜதேஜா ஆகியோரின் பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 272/8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. குல்தீப் 39, 41 மற்றும் 43ஆவது ஓவர்களை வீசினார். அவற்றில் ஒரு விக்கட் எடுத்து மொத்தம் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

          அதன் பிறகு ஆடவந்த இந்திய அணி தனது வெற்றியை முதல் பத்து ஓவர்களில் அறிவித்துவிட்டது. அந்த 10 ஓவர்களில் இந்திய அணி 94/0; அதில் ரோஹித் ஷர்மா 74 ரன். ரோஹித் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் 131 ரன் எடுத்தார். முதலில் ஆட்டமிழந்தது இஷான் கிஷன். அவர் 47 பந்துகளில் 47 ரன் எடுத்தார். பின்னர் ஆடவந்த கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் தங்கள் பங்குக்கு ஆடி 35 ஓவரில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை ஆட்டங்களில் ஏழு சதங்கள் அடித்த முதல் வீரரானார். இன்றைய ஆட்டத்தில் அவர் நாலாவது சிக்சர் அடித்தபோது, ஒருநாள் ஆட்டங்களில் 554 சிக்சர் அடித்து, அதிக சிக்சர் அடித்த வீரரானார்.

          இந்த வெற்றியோடு, நாலு புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில், 1.5 என்ற ரன்ரேட்டுடன் இரண்டாமிடம் வகிக்கிறது.  நாளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே லக்னோவில் ஆட்டம் நடைபெறும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories