WC 2023: ஆப்கன் அணிக்கு எதிராக இந்தியா !

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஏழாம் நாள் – இந்தியா vs ஆப்கானிஸ்தான் – 11.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆப்கானிஸ்தான் அணியை (272/8, ஹஷ்மத்துல்லா 80, ஒமராசி 62, பும்ரா 4/39, பாண்ட்யா 2/43) இந்திய அணி (35 ஓவரில் 2 விக்கட் இழப்பிற்கு 273 ரன், ரோஹித் ஷர்மா 131, இஷான் கிஷன் 47, கோலி 55*, ஷ்ரேயாஸ் ஐயர் 25*, ரஷீத் கான் 2/57) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.  பவர்ப்ளேயான முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 48 ரன் எடுத்தது. ஏழாவது ஓவரில் இப்ராஹிம், 13ஆவது ஓவரில் ரஹமத்துல்லா, 14ஆவது ஓவரில் ரஹமத் ஷா ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஹஷ்மத்துலாவும் ஓமராசியும் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் பும்ரா, குல்தீப், ஜதேஜா ஆகியோரின் பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 272/8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. குல்தீப் 39, 41 மற்றும் 43ஆவது ஓவர்களை வீசினார். அவற்றில் ஒரு விக்கட் எடுத்து மொத்தம் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

          அதன் பிறகு ஆடவந்த இந்திய அணி தனது வெற்றியை முதல் பத்து ஓவர்களில் அறிவித்துவிட்டது. அந்த 10 ஓவர்களில் இந்திய அணி 94/0; அதில் ரோஹித் ஷர்மா 74 ரன். ரோஹித் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் 131 ரன் எடுத்தார். முதலில் ஆட்டமிழந்தது இஷான் கிஷன். அவர் 47 பந்துகளில் 47 ரன் எடுத்தார். பின்னர் ஆடவந்த கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் தங்கள் பங்குக்கு ஆடி 35 ஓவரில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை ஆட்டங்களில் ஏழு சதங்கள் அடித்த முதல் வீரரானார். இன்றைய ஆட்டத்தில் அவர் நாலாவது சிக்சர் அடித்தபோது, ஒருநாள் ஆட்டங்களில் 554 சிக்சர் அடித்து, அதிக சிக்சர் அடித்த வீரரானார்.

          இந்த வெற்றியோடு, நாலு புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில், 1.5 என்ற ரன்ரேட்டுடன் இரண்டாமிடம் வகிக்கிறது.  நாளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே லக்னோவில் ஆட்டம் நடைபெறும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories