WC 2023: இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பெற்ற வெற்றி

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஆறாம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 10.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆறாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. அதில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது.

இங்கிலாந்து vs வங்கதேசம்

இங்கிலாந்து அணி (364/9, மலான் 140, ஜோரூட் 82, பெயர்ஸ்டோ 52, மெஹதி ஹசன் 4/71, ஷோரிஃபுல் இஸ்லாம் 3/75) வங்கதேச அணியை (48.2 ஓவரில் 227, லிட்டன் தாஸ் 76, ரஹீம் 51, ஹிரிதய் 39, டாப்லி 4/43, வோக்ஸ் 2/49) 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

          பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே மட்டையாட வந்த இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து பேட்டர்கள் மிக அருமையாக ஆடினார்கள். இங்கிலாந்து அணி 49 பந்துகளில் 50 ரன்; 93 பந்துகளில் 100; அதாவது அடுத்த 43 பந்துகளில் அடுத்த 50 ரன்; 152 பந்துகளில் 150 ரன்; 193 பந்துகளில் 200; 216 பந்துகளில் 250; 242 பந்துகளில் 300; 290 பந்துகளில் 350 ரன்; என சீராக ரன் குவித்தது. டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 140 ரன் அடித்தார். இப்படியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 364 ரன் எடுத்தது.

          வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன்தாஸ் நன்றாக ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால் அவருடன் விளையாடிய முதல் நான்கு பேட்டர்கள் (ஹசன் 1 ரன், ஷண்டோ 0 ரன், ஷாகிப் 1 ரன், மிராஸ் 8 ரன்) அவருக்கு துணை நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த பேட்டர்கள் சுமாராக ஆடினர். இருப்பினும் ரன் ரேட் மிகக் குறைவாக் இருந்ததால் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

இலங்கை vs பாகிஸ்தான்

இலங்கை அணியை (344/9, குசால் மெண்டிஸ் 122, சமரவிக்ரம 108, நிசாங்கா 51, ஹசன் அலி 4/71, ஹரிஸ் ரவுஃப் 2/64) பாகிஸ்தான் அணி (48.2 ஓவரில் 345/4, ஷஃபிக் 113, ரிஸ்வான் 131*) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பதுன் நிசாங்கா நிதானமாக ஆடினார் என்றால் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 122 ரன் அடித்தார். பதுன் ஆட்டமிழந்ததும் மெண்டிஸுக்கு ஜோடியாக ஆட வந்த சமரவிக்ரமா 89 பந்துகளில் 108 ரன் அடித்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா இருவரும் சதம் அடித்தபோதும் இலங்கை அணியை 50 ஓவர் முடிவில் 344 ரன்னுக்கு பாகிஸ்தான் அணியால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது.

          தங்களது இன்னிங்ஸை ஆட வந்த பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக்கை நாலாவது ஓவரில் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அப்துல்லா ஷஃபிக் (103 பந்துகளில் 113 ரன்) மற்றும் ரிஸ்வான் (ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 131 ரன்) ஆட்டத்தை பாகிஸ்தான் கைப்பிடிக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் 48.2 ஓவரில் பாகிஸ்தான் அணி நாலு விக்கட் இழப்பிற்கு 345 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

          நாளை டெல்லியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆட்டம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories