WC 2023: இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பெற்ற வெற்றி

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஆறாம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 10.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆறாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. அதில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது.

இங்கிலாந்து vs வங்கதேசம்

இங்கிலாந்து அணி (364/9, மலான் 140, ஜோரூட் 82, பெயர்ஸ்டோ 52, மெஹதி ஹசன் 4/71, ஷோரிஃபுல் இஸ்லாம் 3/75) வங்கதேச அணியை (48.2 ஓவரில் 227, லிட்டன் தாஸ் 76, ரஹீம் 51, ஹிரிதய் 39, டாப்லி 4/43, வோக்ஸ் 2/49) 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

          பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே மட்டையாட வந்த இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து பேட்டர்கள் மிக அருமையாக ஆடினார்கள். இங்கிலாந்து அணி 49 பந்துகளில் 50 ரன்; 93 பந்துகளில் 100; அதாவது அடுத்த 43 பந்துகளில் அடுத்த 50 ரன்; 152 பந்துகளில் 150 ரன்; 193 பந்துகளில் 200; 216 பந்துகளில் 250; 242 பந்துகளில் 300; 290 பந்துகளில் 350 ரன்; என சீராக ரன் குவித்தது. டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 140 ரன் அடித்தார். இப்படியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 364 ரன் எடுத்தது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

          வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன்தாஸ் நன்றாக ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால் அவருடன் விளையாடிய முதல் நான்கு பேட்டர்கள் (ஹசன் 1 ரன், ஷண்டோ 0 ரன், ஷாகிப் 1 ரன், மிராஸ் 8 ரன்) அவருக்கு துணை நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த பேட்டர்கள் சுமாராக ஆடினர். இருப்பினும் ரன் ரேட் மிகக் குறைவாக் இருந்ததால் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

இலங்கை vs பாகிஸ்தான்

இலங்கை அணியை (344/9, குசால் மெண்டிஸ் 122, சமரவிக்ரம 108, நிசாங்கா 51, ஹசன் அலி 4/71, ஹரிஸ் ரவுஃப் 2/64) பாகிஸ்தான் அணி (48.2 ஓவரில் 345/4, ஷஃபிக் 113, ரிஸ்வான் 131*) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பதுன் நிசாங்கா நிதானமாக ஆடினார் என்றால் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 122 ரன் அடித்தார். பதுன் ஆட்டமிழந்ததும் மெண்டிஸுக்கு ஜோடியாக ஆட வந்த சமரவிக்ரமா 89 பந்துகளில் 108 ரன் அடித்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா இருவரும் சதம் அடித்தபோதும் இலங்கை அணியை 50 ஓவர் முடிவில் 344 ரன்னுக்கு பாகிஸ்தான் அணியால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

          தங்களது இன்னிங்ஸை ஆட வந்த பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக்கை நாலாவது ஓவரில் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அப்துல்லா ஷஃபிக் (103 பந்துகளில் 113 ரன்) மற்றும் ரிஸ்வான் (ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 131 ரன்) ஆட்டத்தை பாகிஸ்தான் கைப்பிடிக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் 48.2 ஓவரில் பாகிஸ்தான் அணி நாலு விக்கட் இழப்பிற்கு 345 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

          நாளை டெல்லியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆட்டம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories