December 5, 2025, 8:52 PM
26.7 C
Chennai

WC 2023: இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பெற்ற வெற்றி

world cup cricket 2023 - 2025
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஆறாம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 10.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆறாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. அதில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது.

இங்கிலாந்து vs வங்கதேசம்

இங்கிலாந்து அணி (364/9, மலான் 140, ஜோரூட் 82, பெயர்ஸ்டோ 52, மெஹதி ஹசன் 4/71, ஷோரிஃபுல் இஸ்லாம் 3/75) வங்கதேச அணியை (48.2 ஓவரில் 227, லிட்டன் தாஸ் 76, ரஹீம் 51, ஹிரிதய் 39, டாப்லி 4/43, வோக்ஸ் 2/49) 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

          பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே மட்டையாட வந்த இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து பேட்டர்கள் மிக அருமையாக ஆடினார்கள். இங்கிலாந்து அணி 49 பந்துகளில் 50 ரன்; 93 பந்துகளில் 100; அதாவது அடுத்த 43 பந்துகளில் அடுத்த 50 ரன்; 152 பந்துகளில் 150 ரன்; 193 பந்துகளில் 200; 216 பந்துகளில் 250; 242 பந்துகளில் 300; 290 பந்துகளில் 350 ரன்; என சீராக ரன் குவித்தது. டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 140 ரன் அடித்தார். இப்படியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 364 ரன் எடுத்தது.

          வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன்தாஸ் நன்றாக ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால் அவருடன் விளையாடிய முதல் நான்கு பேட்டர்கள் (ஹசன் 1 ரன், ஷண்டோ 0 ரன், ஷாகிப் 1 ரன், மிராஸ் 8 ரன்) அவருக்கு துணை நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த பேட்டர்கள் சுமாராக ஆடினர். இருப்பினும் ரன் ரேட் மிகக் குறைவாக் இருந்ததால் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

இலங்கை vs பாகிஸ்தான்

இலங்கை அணியை (344/9, குசால் மெண்டிஸ் 122, சமரவிக்ரம 108, நிசாங்கா 51, ஹசன் அலி 4/71, ஹரிஸ் ரவுஃப் 2/64) பாகிஸ்தான் அணி (48.2 ஓவரில் 345/4, ஷஃபிக் 113, ரிஸ்வான் 131*) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பதுன் நிசாங்கா நிதானமாக ஆடினார் என்றால் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 122 ரன் அடித்தார். பதுன் ஆட்டமிழந்ததும் மெண்டிஸுக்கு ஜோடியாக ஆட வந்த சமரவிக்ரமா 89 பந்துகளில் 108 ரன் அடித்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா இருவரும் சதம் அடித்தபோதும் இலங்கை அணியை 50 ஓவர் முடிவில் 344 ரன்னுக்கு பாகிஸ்தான் அணியால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது.

          தங்களது இன்னிங்ஸை ஆட வந்த பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக்கை நாலாவது ஓவரில் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அப்துல்லா ஷஃபிக் (103 பந்துகளில் 113 ரன்) மற்றும் ரிஸ்வான் (ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 131 ரன்) ஆட்டத்தை பாகிஸ்தான் கைப்பிடிக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் 48.2 ஓவரில் பாகிஸ்தான் அணி நாலு விக்கட் இழப்பிற்கு 345 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

          நாளை டெல்லியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆட்டம் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories