நாங்கள் தாக்கவில்லை – மலேசியத் தமிழர் அமைப்பு

Published:

மலேசியாவுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகரையும், மலேசியாவில் உள்ள பௌத்த துறவியையும் நாங்கள் தாக்கவில்லை என்று, மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மலேசியத் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதன் இணைப்பாளர் சதீஸ் முனியாண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சாகிப் அன்சார் நேற்று முன்தினம் இனந்தெரியாத குழு ஒன்றினால் தாக்கப்பட்டார். அவரை தமிழ் தரப்பினரே தாக்கியதாக கூறப்படுகிறது. எனினும் தாங்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் செயற்பட வில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை மலேசியாவில் இயங்கும் கலகக்கார முகவர்களே நடத்தி இருக்கக்கூடும் என்றும், தங்களின் போராட்டத்தை குழப்பும் வகையில் அவர்கள் செயற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மகிந்தவுக்கு எதிராக தாங்கள் போராட்டம் நடத்திய போது, தங்களுடன் இருந்த சில பாதுகாப்பு தரப்பினர் மீது பிளாஸ்ட்டிக் போத்தல்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்கள் தங்களுடன் இணைந்தவர்கள் இல்லை என்றும் அவர்கள் குழப்பம் விளைவிக்கவே தங்ளது போராட்டத்தில் பிரவேசித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img