– ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் வருமாறு:- ஆந்திர மாநிலத்தின் அ.தி.மு.க துணைச்செயலாளர்களாக சித்தூரை சேர்ந்த ராஜாரெட்டி, குண்டூரை சேர்ந்த என்.எஸ். லாடு வெங்கடேஸ்வரலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆந்திர மாநில எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளராக எஸ்.மாரியப்பன், மாநிலத்துணை செயலாளராக முனிசுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நெல்லூர் நகரக்கழக செயலாளராக கே.சி.மணி ( கூடூர் தொகுதி) நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களாக சீனிமுகமது, என்.கோபால், மற்றும் ஏ.ஒ. குணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் அ.தி.மு.க உதயம்:
தெலங்கானா மாநிலத்தில் அ.தி.மு.க உதயமாகியுள்ளது. அம்மாநிலத்தின் அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- தெலுங்கானா மாநிலக்கழகம் உருவாக்கப்பட்டு அதன் அவைத்தலைவராக டி.லட்சுமணன் ( கிழக்கு மாருதி நகர் மெளலாளி, ஐதராபாத்) மாநிலச்செயலாளராக ஏ.ஏ.பாண்டியன் ( லிங்கோஜிகுடா, பையராமல் குடா , சரூநகர்), மாநில இணைச்செயலாளர்களாக கிழக்கு மாருதி நகர் மெளலாளியை சேர்ந்த கஸ்தூரி, மாநிலத்துணை செயலாளராக ஆர்.கற்பகம், ஆர்.பிரசாதராவ், மாநில பொருளாளராக எம்.ராமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்..



