மனைவியின் கொலை திட்டத்தை முறியடித்த கணவன்! கைதான மனைவி!

roman 1 - 2026

கணவனை கொலை செய்ய மனைவி கூலிப்படையை ஏவிய சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளர் ரோமன். இவர் அந்நாட்டிலுள்ள பல குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில் 2007-ஆம் ஆண்டில் ஒரு கேளிக்கை விடுதியில் மரியா என்ற பெண்ணை சந்தித்தார் ரோமன், இருவரும் காதலித்து 2010 ல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் ஒன்றாக ஒரு உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்தனர். திடீரென்று அது நஷ்டத்தில் சென்றது. இதனால் கணவன் மனைவி இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இறுதியாக மரியா தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற முடிவு எடுத்தார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக இருவரும் ஒன்றாக வாழ வேண்டியிருந்தது.

இந்த சூழலில் கஸ்டாவோ என்ற அடியாளை சந்தித்த மரியா தன் கணவரை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் அவரிடம் 1500 பவுண்டுகள் வழங்கியுள்ளார். கணவரின் புகைப்படத்தை அந்த அடியாளிடம் கொடுத்திருக்கிறார் மரியா.. புகைப்படத்தை கண்ட கஸ்டாவோ அதிர்ந்தார் ரோமன் அவருடைய நீண்டகால நண்பர். மேலும் அவருக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்தவர். உடனடியாக கஸ்டாவோ ரோமனிடம் அனைத்தையும் கூறியுள்ளார்..

roman 1 1 - 2026

மனைவியின் இந்த திட்டத்தால் அதிர்ந்த ரோமன், ஒரு திட்டம் தீட்டினார். தான் இறந்ததாக நடித்து ஒரு போலியான படம் எடுத்து கொடுத்தார் பின்னர் அந்த புகைப்படத்தை கஸ்டாவோ மூலமாக மரியாவிடம் அனுப்பினார்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

அந்தப் புகைப்படத்தை கண்ட மரியா முதலில் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது காவல்துறையினர் மறைந்திருந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். புகைப்படத்தை பெற்றுக்கொண்ட மரியா ரோமன் இறந்துவிட்டார் என்பதை கேட்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளி ஆடினார்.

அப்போது காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். தான் செய்த குற்றத்தை மரியா ஒப்புக்கொண்டார். உடனடியாக அவரை சிறையில் அடைத்து விசாரணை நடத்தினர். இப்பொழுது மரியாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories