மெல்பர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 45 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 183 ரன்னே எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எளிய இலக்கை நிர்ணயித்தது. துவக்கம் முதலே நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். குப்டில் 15 ரன்னிலும், மெக்குலம் ரன் ஏதும் எடுக்காமலும், வில்லியம்சன் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்ததால், அணியின் ரன் வேகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் வந்த டெய்லர் 40 ரன்னும், எலியாட் 83 ரன்னும் எடுத்தனர். இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழக்க, நியூசிலாந்து அணி 45 ஓவரில் 183 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.
183 ரன்னுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

