புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை: புதிய அரசின் வெற்றி என்கிறார் அஜித் பேரேரா

Published:

ajith-perera தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்திருப்பது, இலங்கையின் புதிய அரசுக்குக் கிடைத்த பெரும் அரசு ரீதியான வெற்றி என்றார் அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித் பெரேரா. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை கொண்டு வருவது குறித்து இலங்கை அரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து விடுதலைப் புலிகள் இயக்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் சில நாட்களுக்கு முன் மீண்டும் தடையைக் கொண்டுவந்தது. விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடை இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவிலும்கூட அது மிக முக்கியமான ஒன்று என அஜித் பெரேரா கூறினார். இலங்கையில் மறுகட்டமைப்பு தொடர்பாக இலங்கை அரசு செயல்படும் நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக அது செயல்படுவது என்பதும் மிக முக்கியம். எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதித்திருப்பது இலங்கைக்கு முக்கியம்தான். மஹிந்த ராஜபட்ச தலைமையிலான முந்தைய அரசின் ராஜதந்திர செயல்பாடுகளில் காணப்பட்ட குறையினாலேயே ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட காரணமாயிருந்தது. மேலும், இலங்கையின் புதிய அரசுப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சகம் ஆகியவற்றின் முயற்சிகளின் காரணமாகவே, விடுதலைப்புலிகள் மீது மீண்டும் தடை வந்துள்ளது என்றும் கூறியுள்ளார் அஜித் பெரேரா. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img