பீஜிங்: சீனா உருவாக்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் மேலும் பல நாடுகள் இணையும் என்று அதிபர் ஜீ ஜிங் பிங் தெரிவித்தார். சீனாவின் தென் பகுதியிலுள்ள ஹைனான் தீவில் நடைபெறும் போவோ சர்வதேசக் கருத்தரங்கில், நேபாளம், இலங்கை அதிபர்கள், மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், டாடா முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவில் முக்கியத் தொழிலதிபர்கள், அதிகாரிகளும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். டாடா முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் போவோ நிர்வாகக் குழு உறுப்பினராக கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டார். இந்தக் கருத்தரங்கில் சனிக்கிழமை கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஜீ ஜிங் பிங், பொருளாதாரத்தில் தாராள மயம், வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு ஏற்ற சூழல், முதலீட்டாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் நலன்களுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை சீனா உறுதி செய்யும். சீனா உருவாக்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்பட 30 நாடுகள், உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன. ரஷியாவும் இந்த வங்கியில் பங்கு பெறப் போவதாக அறிவித்துள்ளது. அந்த வங்கியில் உறுப்பு நாடாகச் சேருவதற்கு கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேலும் பல நாடுகள் அதில் பங்கு பெறுவதாக அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் மேலும் பல நாடுகள் இணையும்: ஜீ ஜிங் பிங்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

