February 21, 2026, 11:37 PM
26.7 C
Chennai

இங்க திருக்குறளை வேணும்னா திருத்தி எழுதுவாங்க! சீனாவில் குர்ஆனையும் பைபிளையும் திருத்துறானுங்க!

China muslim - 2026

மனிதர்களைத் திருத்துவதற்கு, அவர்களின் மத நூல்களைத் திருத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சீனா. சீன முஸ்லிம்கள் நாட்டுப் பற்றுடன் இருக்க அவர்களது மத நூலைத் திருத்தி எழுதினால் போதும் என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது சீனா.

சீனாவில் மதக் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது என்று சர்வதேச நாடுகளும் மனித உரிமை ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இப்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பியுள்ளது.

அதாவது பைபிள் குரான் இரண்டையும் திருத்தி எழுத போகிறது சீனா. சீனாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். பிஷப்புகளை நியமிக்கும் நடைமுறைக்கு மாறாக சீன அரசு கொடுக்கும் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்ற நடைமுறையை சீனா உருவாக்கியுள்ளது.

சீனாவின் மாண்டரின் மொழியைத்தான் உய்குர் முஸ்லிம்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் மசூதிகளில் குவிமாடங்கள் இடிக்கப்பட்டு சீனாவின் கட்டடப் பாணியில் பகோடா வடிவ கோபுரங்களை அமைக்கப்பட்ட மசூதிகள் ஆக மாற்றி வருகின்றனர். மசூதிகளில் சீன தேசிய கொடி பறக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

எவ்வளவு நீளத்திற்கு முஸ்லிம்கள் தாடி வளர்க்கலாம் என்பதையும் சீன அரசு தான் தீர்மானிக்கிறது. 10 லட்சம் உய்குர் முஸ்லிம்களை வதை முகாம்களில் வைத்து கடின உழைப்புக்கு ஆளாகி வருவதாக சான்றுகளுடன் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதை சீன மறுத்து வருகிறது.

உய்குர் முஸ்லிம்களுக்கு கல்வி மையம் தான் நடத்தப்படுகிறது என்று சீனா கூறுகிறது. இப்போது பைபிள் குரான் இரண்டையும் மொழிபெயர்த்து சோசலிச கருத்துக்கு மாறுபட்ட பகுதிகளை நீக்கிவிட்டு இன்றைய காலத்திற்கேற்ற சோஷலிச விழுமியங்களுடன் திருத்தி எழுத தீர்மானித்துள்ளது சீனா!

இதற்காக மத நம்பிக்கையுள்ள சிலருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்பட 16 பேர் கொண்ட குழுவை சீன அரசு நியமித்துள்ளது. பைபிள் அல்லது குர்ஆனில் உள்ள சில பகுதிகளில் சில பகுதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதி தணிக்கையில் வெட்டப்படும் அல்லது திருத்தி எழுதப்படும்.

முஸ்லிம்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்று மேலைநாடுகள் கூச்சல் போட்டாலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories