மனிதர்களைத் திருத்துவதற்கு, அவர்களின் மத நூல்களைத் திருத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சீனா. சீன முஸ்லிம்கள் நாட்டுப் பற்றுடன் இருக்க அவர்களது மத நூலைத் திருத்தி எழுதினால் போதும் என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது சீனா.
சீனாவில் மதக் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது என்று சர்வதேச நாடுகளும் மனித உரிமை ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இப்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பியுள்ளது.
அதாவது பைபிள் குரான் இரண்டையும் திருத்தி எழுத போகிறது சீனா. சீனாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். பிஷப்புகளை நியமிக்கும் நடைமுறைக்கு மாறாக சீன அரசு கொடுக்கும் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்ற நடைமுறையை சீனா உருவாக்கியுள்ளது.
சீனாவின் மாண்டரின் மொழியைத்தான் உய்குர் முஸ்லிம்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும் மசூதிகளில் குவிமாடங்கள் இடிக்கப்பட்டு சீனாவின் கட்டடப் பாணியில் பகோடா வடிவ கோபுரங்களை அமைக்கப்பட்ட மசூதிகள் ஆக மாற்றி வருகின்றனர். மசூதிகளில் சீன தேசிய கொடி பறக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!
எவ்வளவு நீளத்திற்கு முஸ்லிம்கள் தாடி வளர்க்கலாம் என்பதையும் சீன அரசு தான் தீர்மானிக்கிறது. 10 லட்சம் உய்குர் முஸ்லிம்களை வதை முகாம்களில் வைத்து கடின உழைப்புக்கு ஆளாகி வருவதாக சான்றுகளுடன் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதை சீன மறுத்து வருகிறது.
உய்குர் முஸ்லிம்களுக்கு கல்வி மையம் தான் நடத்தப்படுகிறது என்று சீனா கூறுகிறது. இப்போது பைபிள் குரான் இரண்டையும் மொழிபெயர்த்து சோசலிச கருத்துக்கு மாறுபட்ட பகுதிகளை நீக்கிவிட்டு இன்றைய காலத்திற்கேற்ற சோஷலிச விழுமியங்களுடன் திருத்தி எழுத தீர்மானித்துள்ளது சீனா!
இதற்காக மத நம்பிக்கையுள்ள சிலருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்பட 16 பேர் கொண்ட குழுவை சீன அரசு நியமித்துள்ளது. பைபிள் அல்லது குர்ஆனில் உள்ள சில பகுதிகளில் சில பகுதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதி தணிக்கையில் வெட்டப்படும் அல்லது திருத்தி எழுதப்படும்.
முஸ்லிம்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்று மேலைநாடுகள் கூச்சல் போட்டாலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!