லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி; பாலம் மூடல்!

london bridge borough market - 2026

லண்டன்:

லண்டனில் உள்ள பாலத்தில் வெள்ளை வேன் ஒன்றை தாறுமாறாக ஓட்டி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியல், 6 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

புகழ்பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த வெள்ளை வேன் ஒன்று, நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பாலத்தில் தாறுமாறாக ஓடி அதில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து போலீசார் தாற்காலிகமாக லண்டன் பாலத்தை மூடியுள்ளனர்.

வெள்ளை வேனில் 3 பேர் இருந்தனர். உணவுவிடுதிகள், மதுபான பார்கள் அதிகம் கொண்ட பரோஹ் மார்க்கெட் பகுதியில் மக்களை மிரட்டி கத்தியல குத்தினர் என்றும் அவர்கள் ஆயுதங்களுடன் இருக்கலாம் எனவும் லண்டன் போலீசார் கூறினர். இந்தச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாதிகள் மூவரும் அடுத்த 8 நிமிடங்களில் ஆயுத போலீஸாரால் சுடப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கூறிய காவல் துணை ஆணையர் மார்க் ரௌவ்லி, “சந்தேகப்படும்படி வந்த அந்த நபர்கள், தங்களிடம் தற்கொலைப் படையினர் போன்ற ஆயுதங்களை உடையில் கட்டியிருந்தனர். அதனால் சற்று பின்வாங்க நேர்ந்தது. அவர்கள் சுடப்பட்ட பின்னர்தான் அவை போலியானவை என்று தெரியவந்தது” என்றார்.

இந்தத் தாக்குதலில் காயம் பட்ட 30க்கும் மேற்பட்டோரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றதாக, ஆம்புலன்ஸ் சர்வீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் மிரட்டியபோது, எதிர்ப்பு தெரிவித்த போக்குவரத்து நடத்துனர் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. ஆனால் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று போக்குவரத்து போலீஸார் ஒருவர் கூறினார்.

இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்று கூறி, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அவசர கூட்டத்தைக் கூட்டினார்.

இதனிடையே லண்டன் சம்பவம் பெரும் வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு வேண்டிய உதவியை அமெரிக்கா செய்யும். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வெளிநாட்டு பயணிகளுக்கான தீவிர கட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories