கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சிவகாமிபுரம்விலக்கு நிறுத்தத்தில்
எஸ்.எப்.எஸ். பஸ்கள் நின்று செல்ல கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.யின் கோரிக்கையை
ஏற்று ஆணை கீழப்பாவூர் அருகேயுள்ள சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் தனியார்
பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர், மாணவியர்கள் மற்றும்
சிவகாமிபுரம் ஊர் பொதுமக்கள் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி
வருகின்றனர். ஆனால் நெல்லை-தென்காசிக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள்
இங்கு நிற்காததால் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டு வந்தது. எனவே இங்கு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு
செய்துத்தரக்கோரி சிவகாமிபுரம் பூ வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும்
மாணவர்,மாணவிகள் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலரும், மக்களவை
உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேசி, அனைத்து பேருந்துகளும்
நின்று செல்ல ஏற்பாடு செய்தார். அப்பகுதியில்
நடைபெற்ற விழாவில் எஸ்.எப்.எஸ். பேருந்துகள் நிறுத்த ஆணையை பெற்றுக்கொண்ட
கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., பேருந்துகள் நின்று செல்லும் நிகழ்ச்சியையும்
தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர்
செல்வகோமதிகுமார், வணிக மேலாளர் சுப்பிரமணியன், கிளை மேலாளர்கள் தென்காசி
பழனியப்பன், புளியங்குடி கோபாலகிருஷ்ணன், செங்கோட்டை முருகன் மற்றும் ஒன்றிய
அதிமுக செயலாளர் நடராஜன், பேரூர் செயலாளர் பாஸ்கர், மாநில பேச்சாளர் தீப்பொறி
அப்பாத்துரை, நிர்வாகிகள் கணபதி, , மதியழகன், தியாகராஜன், ஆண்டபெருமாள், உள்பட
பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு செய்து தந்த கே.ஆர்.பி.பிரபாகரன்
எம்.பிக்கு பூ வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர், மாணவியர்கள் நன்றி
தெரிவித்துள்ளனர்.




