எனக்கு 26 உனக்கு 62: காதல் திருமணம்

love
love

இங்கிலாந்தை சேர்ந்த 62 வயது மூதாட்டிக்கும், துனிசியாவை சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் 62 வயதான இசபெல் டிப்பில் என்பவருக்கும், துனிசியாவில் வசிக்கும் 26 வயதான டாக்ஸி ஓட்டுநர் பேராமுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக்கில் நண்பர்களான இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் இசபெல்லுக்கு இதுவரை மூன்று முறை திருமணமான நிலையில் கணவன்கள் இறந்துள்ளனர். அவர் தனது பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இசபெல் தனது குடும்பத்தினருடன் துனிசியா சென்ற போது பேராம் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். தனது வீட்டில் கேக், விளக்குகள் வைத்து மேசையை அலங்கரித்து பேராம் தனது காதலை தெரிவித்துள்ளார்.

love
love

முதலில் வயது வித்தியாசம் தொடர்பாக யோசித்த இசபெல், இறுதியில் காதலுக்கு டபுள் ஓகே கூறிவிட்டார். அதன்பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் இருவரும் அவரவர் சொந்த நாட்டில் இருக்கின்றனர். விமான சேவைகள் தொடங்கிய பிறகு பேராம் தன்னைக் காண இங்கிலாந்து வந்துவிடுவார் என இசபெல் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தங்களது காதலுக்கு வயது தடையாக இருக்கவில்லை என்றும், பேராம் தன்னிடம் இருந்து எந்த பண உதவியும் எதிர்பார்க்கவில்லை என்றும் இசபெல் கூறியுள்ளார்.

love
love

இதுபோன்ற சம்பவங்களை கேள்விப்பட்ட போது ஆச்சரியப்பட்டதாகவும், தற்போது தன்னுடைய வாழ்வில் அப்படி ஒரு திருமணம் நடந்துள்ளதாகவும் இசபெல் தெரிவித்துள்ளார். தான் இசபெல்லை வயதான பெண்ணாக பார்க்கவில்லை என்றும், நல்ல குணம் உள்ள ஒரு பெண்ணாக மட்டுமே பார்ப்பதாக பேராம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். கொரோனா பாதிப்பால் எங்களால் சந்திக்க முடியவில்லை. ஆனால் எனது மனைவிக்காக நான் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன். என்னுடைய அழகான மனைவியை நான் அதிகம் நேசிக்கிறேன்’என கூறியுள்ளார்.

இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பேராம் மற்றும் இசபெல் தம்பதிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories