பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு கொரோனோ பாதிப்பு !

afridi gambhir
afridi gambhir

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான ஷாகித் அப்ரிடி தமக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் தாம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக  அப்ரிடி கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி சனிக்கிழமை கொரோனா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள்  வந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்

27 டெஸ்ட், 398 ஒருநாள் போட்டிகள் (ஒருநாள்) மற்றும் 99 டி-20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய அப்ரிடி, ட்விட்டரில் தமக்கு கொரோனா இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளார். மேலும்,  வியாழக்கிழமை முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், தனது முடிவுகள் பாசிட்டிவ் என்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

 “வியாழக்கிழமை முதல் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்; என் உடல் மோசமாக வலிக்கிறது. நான் பரிசோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு பாசிட்டிவ் என்று சோதனைமுடிவு வந்தது. நான்  விரைவாக மீண்டு வர பிரார்த்தனை தேவை” என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்பிகுர் ரஹிம்,  தான் பயன்படுத்திய ஒரு பேட்-ஐ  ஒரு தொண்டு நிறுவனம் மூலம் ஏலம்  நடத்த விட்டதில், அது போலியானது என்று திரும்பப் பெறப் பட்டது.  அப்போது  ஷாஹித் அப்ரிடி பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீமுக்கு சொந்தமான அந்த கிரிக்கெட் மட்டையை வாங்குவதில் இறங்கினார்.

இலங்கைக்கு எதிராக 2013 ல் பங்களாதேஷின் முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை அடித்த முஷ்பிகூர், கடந்த வாரம் ஆன்லைனில் அதிக விலைக்கு ஏலம் விட்டார். ஆனால், 50,000 அமெரிக்க டாலருக்கு மேல் விலையை நிர்ணயித்ததால் அமைப்பாளர்கள் அந்த ஏலத்தை நிறுத்தினர் என்று முஷ்பிகூர் கூறினார்.

அதன் பின்னர் “அஃப்ரிடி என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டார், நான் அவருக்கு ஏலத்தின் இணைப்பை அனுப்பினேன்” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஆன்லைன் மன்றத்தில் தெரிவித்தார்.

“மே 13 அன்று அவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி 20,000 அமெரிக்க டாலர்களை வழங்கினார். இந்த பணத்துடன் அவர் எனது மட்டையை வாங்கினார். நான் உண்மையிலேயே சலுகை பெற்றேன்” என்று அவர் கூறினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலான தனது தொழில் முறை வாழ்க்கையில், ஷாகித் அஃப்ரிடி 27 டெஸ்ட், 398 ஒருநாள் போட்டிகள் (ஒருநாள்) மற்றும் 99 சர்வதேச டி 20 போட்டிகளில் பாகிஸ்தான் சார்பில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 8,064 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 1,716 ரன்களும், டி20 யில் 1,416 ரன்களும் எடுத்தார்.

பேட்டிங் மட்டுமல்லாது, அஃப்ரிடி தனது பந்துவீச்சு திறனால் ரசிகர்களை அதிகம் பெற்றார்.  டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் முறையே 48 மற்றும் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 50 ஓவர் வடிவத்தில் 395 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories